முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெரிசல் மிகுந்த நேரங்களில் விரைவாக செல்ல பைக் ஆம்புலன்ஸ் டெல்லியில் அறிமுகமாகிறது

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் அவசரத் தேவைக்கு பைக் ஆம்புலன்ஸ் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக 16 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன. இந்த முன்னெடுப்பு டெல்லியின் 3 மாவட்டங்களில் ஜனவரியில் இருந்து அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு டெல்லியின் துணைநிலை கவர்னர் அனில் பைஜால் தலைமையிலான சந்திப்புக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், சில மருத்துவமனைகளின் மருத்துவ கண்காணிப்பாளர்கள், டெல்லி காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
 ''டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களிலும், நெரிசலான சாலைகளிலும் அவசர கால ஆம்புலன்ஸ் தேவை அதிகமாக உள்ளது. எனவே தற்போதுள்ள

ஆம்புலன்ஸுகளுக்கு உதவும் வகையில் பைக் ஆம்புலன்ஸை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இந்த வசதி டெல்லியின் கிழக்கு, வட-கிழக்கு, ஷகாதரா மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படும். முதல்கட்டமாக 16 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.இந்த இருசக்கர வண்டிகள் பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்களைக் கொண்டு இயக்கப்படும். அவர்கள் முதலுதவிப் பெட்டி, மருந்துகள் மற்றும் தேவையான பிற பொருட்களைக் கையில் வைத்திருப்பர்.

தேவை ஏற்படும் இடத்துக்கு உடனடியாகச் செல்லும் அவர்கள், முதலுதவியை அளித்து, நோயாளிகளை நிலைப்படுத்தி ஆம்புலன்ஸ் வரும்வரை அங்கேயே காத்திருப்பர்.இதன்மூலம் விபத்துக்குள்ளான மனிதர்களின் பொன்னான நேரத்தில் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டு, அவர்களின் உயிரைக் காக்க முடியும்'' என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து