எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- செட்டாப் பாக்ஸ்களுக்கு பணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கேபிள் ஆபரேட்டர்களுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கடலாடி மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாக்களில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் 27 பள்ளிகளைச் சார்ந்த 3,187 மாணாக்கர்களுக்கு மொத்தம் ரூ.4.77 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்குதல் என்ற மகத்தான திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். இத்திட்டமானது இந்திய திருநாட்டில் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலத்திலும் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சிறப்பான திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் கடந்த ஐந்தாண்டுகளில் மொத்தம் ரூ.8,900 கோடி மதிப்பில் ஏறத்தாழ 33 லட்சம் மாணவ மாணவியர்கள் தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளைப் பெற்று பயனடையும் வகையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நடப்பு கல்வியாண்டில் ஏறத்தாழ 5,35,000 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக வழங்கப்பட்டு வருகின்றன.
குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் நடப்பு கல்வியாண்டில் 85 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சார்ந்த 10,778 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கிட திட்டமிடப்பட்டு 85 சதவீத மாணாக்கர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில தினங்களில் மீதமுள்ள மாணாக்கர்களுக்கும் வழங்கப்பட்டு 100 சதவீதம் நிறைவு செய்யப்படும். இன்றைய தினம் மட்டும் கமுதி, முதுகுளத்தூர் மற்றும் கடலாடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 27 பள்ளிகளில் பயிலும் 3,187 மாணாக்கர்களுக்கு ரூ.4.77 கோடி மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் தரமான டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய தொலைக்காட்சி சேனல்களை பார்த்து பயனடைந்திடும் வகையில் தகவல் தொழில்நுட்பத்துறையின் சார்பாக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மொத்தம் 70.52 லட்சம் அரசு கேபிள் சந்தாதாரர்கள் உள்ளனர். செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டத்தைப் பொறுத்த வரையில் 100 சதவீதம் விலையில்லாமல் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. செயல்படுத்தல் கட்டணமாக மட்டும் ரூ.200 வசூலிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ஒரு சில பகுதிகளில் உள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாடு அரசின் விலையில்லா செட்டப் பாக்ஸ்களை பொதுமக்களிடத்தில் பணம் வசூலித்து விற்பனை செய்வதாக புகார்கள் வருகின்றன. அவ்வாறு பணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்கள் குறித்து பொதுமக்கள் தயங்காமல் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்திட வேண்டும். தமிழ்நாடு அரசின் விலையில்லா செட்டாப் பாக்ஸ் வழங்கிட பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் கேபிள் ஆப்பரேட்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு பேசினார். இவ்விழாக்களில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், மாவட்ட செயலாளர் முனியசாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட பள்ளி தலைமையாசிரியர்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.