முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      தேனி
Image Unavailable

 தேனி -தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்   மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், தலைமையில் நடைபெற்றது. மேலும், ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் வாரிசுதாரர்களிடம் ஓய்வூதியம் தொடர்பான பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார்.
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர்களின் நிலுவையில் உள்ள ஓய்வூதிய பலன்கள் மற்றும் அதன் தொடர்பான கோரிக்கை மனுக்களை பரிசீலனை செய்திடவும், ஓய்வூதியம் தொடர்பான குறைகள் ஏதும் இருப்பின் நிவர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் தொடர்புடைய தொடர்பு அலுவலர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் சீரான இடைவெளியில் நடத்தப்பட்டு ஓய்வுதியதாரர்களுக்கு உரிய பலன் வழங்கப்பட்டு வருகிறது.
ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 7 ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு மற்றும் நல நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.3,50,000ஃ-த்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
இக்கூட்டத்தில், சென்னை ஓய்வூதியர் நல  இயக்கக இணை இயக்குநர் (ஓய்வூதியம்)  தி.மஞ்சுளா   துணை இயக்குநர்  மதிவாணன்   மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு)  ரவிச்சந்திரன்   மாவட்ட கருவூல கணக்கு அலுவலர் (பொ)  கிருஷ்ணமூர்த்தி   ஓய்வூதியர்கள் மற்றும் ஓய்வூதிய சங்கத்தைச் சார்ந்தவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து