முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மேல்நிலைப்பள்ளியில் 77 லட்சம் மதிப்பீட்டில் வேதியியல் ஆய்வுக்கட்டிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, மதுரை, ஸ்ரீமீனாட்சிசுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளவேதியியல் ஆய்வுக்கூடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

“கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” எனும் பழமொழிக்கேற்ப தல வழிபாடு பக்தர்களால்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் சீர்த்தகு சிறப்பின் பெரும்படைவாழ்த்தலென் இருமூன்று வகையில் கல்லொடு புணர” எனத் தொல்காப்பியர் கூறுவதுபோல்கல்தேடல், கோயில் திருப்பணி ஏற்பாடுகள், புனித நீராட்டல், நடுதல், படையலிடுதல், வாழ்த்திவணங்குதல் என திருக்கோயில் தொடர்பாக நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள்எண்ணற்றவை. இதனை தொன்று தொட்டு மேற்கொள்ளப்பெற்ற வழிபாட்டு மரபுகள் பல்வேறுவகையான வளர்ச்சிகளைப் பெற்றுள்ளன. இதனை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருவள்ளூர் மாவட்டம்,திருப்பாச்சூர் அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயிலில் 2442 சதுர அடி கட்டட பரப்பளவில்,55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 108 பக்தர்கள் உணவருந்தும் வகையில் கட்டப்பட்டுள்ளஅன்னதானக் கூடம் மற்றும் மதுரை, ஸ்ரீமீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்3669 சதுர அடி கட்டட பரப்பளவில் 77 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வேதியியல்ஆய்வுக்கூடம், என மொத்தம் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்கே. ராஜூ, வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் . சேவூர் எஸ். இராமச்சந்திரன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,சுற்றுலா, பண்பாடு மற்றும்அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, இந்து சமயஅறநிலையத்துறை ஆணையர் ஜெயா, மற்றும் அரசு உயர் அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து