முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

11 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2,573 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      திருவள்ளூர்
Image Unavailable

திருவள்ளுர் மாவட்டம், ஆவடி, இமாகுலேட் இருதய மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்  தமிழ் ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் தொல்லியல்துறை  க.பாண்டியராஜன் அவர்கள் 11 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 2,573 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளை   வழங்கினார்.

ஏழை, எளிய பள்ளி மாணவர்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கு ஏதுவாக விலையில்லா மடிக்கணினிகளை முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களின் அரசு 2011 முதல் இத்திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தால் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மேற்படிப்பு படிப்பதற்கு உறுதுணையாக உள்ளது. மாணவர்கள் கல்லூரிகளில் புராஜக்ட் போன்ற விஷயங்கள் மேற்கொள்ள மடிக்கணினிகள் பெரும் உதவியாக உள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளி கல்விக்காக ரூ. 28 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறது.  இது தேசிய அளவில் 25 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியாகும்.

திருவள்ளுர் மாவட்டத்தில் 111 பள்ளிகளில் 21,903 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளது. இன்று நடைபெறும் நிகழ்;வில் ஆவடி பகுதிகளைச் சேர்ந்த அயனம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 74 மாணவர்கள், மிட்டணமல்லி அரசு மேல்நிலைப்பள்ளியில் 89 மாணவர்கள், எஸ்.எம். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 138 மாணவர்கள், ஆவடி விஜயந்தா மேல்நிலைப்பள்ளியில் 219 மாணவர்கள், திருவேற்காடு எஸ்.கே.டி.ஜெ. மேல்நிலைப்பள்ளியில் 212 மாணவர்கள், காமராஜ்நகர் அரசு (ஆ) மேல்நிலைப்பள்ளியில் 134 மாணவர்கள், காமராஜ்நர் அரசு (பெ) மேல்நிலைப்பள்ளியில் 413 மாணவர்கள், தண்டுரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 177 மாணவர்கள், திருநின்றவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 168 மாணவர்கள், ஆவடி இமாகுலேட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 666 மாணவர்கள், காமராஜ்நகர் ஆர்.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் 283 மாணவர்கள் ஆக மொத்தம் 2,573 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கியது மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என தமிழ் ஆட்சி மொழி, கலைபண்பாடு மற்றும் இந்நிகழ்ச்சியில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வேணுகோபால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர் த.இராஜேந்திரன்,பள்ளி தலைமை ஆசிரியர்கள், உதவி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து