எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை : பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படும் என்றும் தமிழகத்தில் குடிமராமத்து பணிக்கு அடுத்தக்கட்டமாக மேலும் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நெல்லை விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பிறகு விழா மேடையில் எம்.ஜி.ஆர். திரு உருவப்படத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதன் பிறகு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றபொழுது, நானும், துணை முதலமைச்சரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் என்ற ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்ற கருத்தை மக்களிடையே எடுத்து வைத்தோம். இதில் ஸ்டாலின் என்ன குறைகண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. அவர் பேட்டி கொடுக்கும்பொழுது, உள்ளக்குமுறலோடு அவர் வெளிப்படுத்திய கருத்து என்னவென்று ஊடகங்கள், பத்திரிகை வாயிலாக நாம் பார்த்தோம், உங்களுக்கும் தெரியும். எந்தளவிற்கு அவர் விமர்சனம் செய்துள்ளார், எந்தளவிற்கு எங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்பது அவருடைய உள்ளக்குமுறலில் இருந்து நாங்கள் பார்க்க முடிகிறது.
கானல்நீராகத்தான் இருக்கும்
ஆகவே, நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஏனென்று சொன்னால், இந்த இயக்கம் ஒன்றாக இருக்கக்கூடாது, இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று பலரின் துணையோடு அவர் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். அவர் கனவு கானல்நீராகத்தான் இருக்கும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டுகின்றேன். எவ்வளவு இன்னல்கள், துன்பங்கள் இருந்தாலும் நாங்கள் இணைந்து செயல்பட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலே நாம் சபதம் ஏற்போம். இருபெரும் தலைவர்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதே நம்முடைய இலட்சியம்.
அதேபோல, புயல், வெள்ளம், வறட்சி எது வந்தாலும் சரி, மக்கள் பாதிக்கப்பட்டால், எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்திலும் சரி, மக்களுக்கு ஓடோடிப் போய் உதவி செய்கின்ற ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை மக்கள் உணருவார்கள். ஆகவே, இந்த இயக்கம் மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம். இவர்களைப்போன்று, ஒரு குடும்பத்திற்காக ஆட்சி செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி அல்ல. நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி.
அதேபோல, இருபெரும் தலைவர்கள் எப்படி கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கும் திட்டப்பணிகளை எடுத்துச் சென்றார்களோ அதேபோல அம்மாவினுடைய அரசும், கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கு திட்டப்பணிகளை எடுத்துச் செல்வதில் இரவு பகல் பாராமல் உழைத்து முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கின்ற அரசு இந்த அரசு.
மேலும் ரூ.300 கோடி ஒதுக்கீடு
விவாசாய பெருங்குடி மக்கள் பயன்பெற வேண்டுமென்பதற்காக நீண்ட நாட்களாக விவசாயிகள் அரசுக்கு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக குடிமராமத்து என்னும் அற்புதமான திட்டத்தை அம்மாவினுடைய அரசு துவக்கி, முதற்கட்டமாக ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்து, 1519 ஏரிகளில் பணிகள் துவங்கப்பட்டு இன்றைக்கு நிறைவடைந்திருக்கின்றன. அடுத்தகட்டமாக ரூபாய் 300 கோடி குடிமராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது.
அதன்மூலம், பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படும். அதுமட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள், நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் எல்லாம் குடிமராமத்து திட்டத்தில் பங்குபெற்று அவர்களும் சொந்த செலவிலே ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை அள்ளுவதற்கு உதவி செய்தார்கள். விவசாயப் பெருங்குடிமக்களும், விவசாய பிரதிநிதிகளும் ஆங்காங்கே ஏரி, குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து, தங்கள் நிலங்களுக்கு எருவாக இட்டார்கள்.
ஆகவே, இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய, பிரம்மாண்டமான திட்டம். விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகின்ற திட்டம். இத்திட்டம் மூலமாக, பருவமழை பொழிகின்றபொழுது கிட்டத்தட்ட 30 சதவீதம் நீர் தேங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித்தந்த அரசு அம்மாவினுடைய அரசு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஒரு மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு விவசாயிகளுக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீரை செறிவூட்டுவதற்காக கிட்டத்தட்ட ரூபாய் 1000 கோடி அம்மாவினுடைய அரசால் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்றாண்டுகளில் தடுப்பணை கட்டும் பணி துவங்கப்படும். முதற்கட்டமாக இந்த ஆண்டு ரூபாய் 350 கோடி தடுப்பணை கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலமாக ஓடைகள், ஆங்காங்கே இருக்கின்ற நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு பருவமழையில் பொழிகின்ற நீரை தேக்கி வைத்து, நிலத்தடி நீரை உயரச் செய்வதற்கு அம்மாவினுடைய அரசு திட்டங்கள் தீட்டி, செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அதேபோல, கல்வியிலே அம்மாவினுடைய அரசு புரட்சி கண்டுள்ளது. கடந்த ஆறாண்டுகளில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாக கல்லூரிகளை தொடங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில்தான் கிட்டத்தட்ட அரசு 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்குத் தந்தார்கள். ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் பகுதியிலேயே குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை அம்மா உருவாக்கித் தந்திருக்கின்றார்கள். அம்மாவினுடைய அரசும் இந்த ஆண்டு 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்திருக்கின்றது.
ஆக, அம்மாவினுடைய அரசு, கடந்த ஆறாண்டுகளில் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்து கல்வித்தரத்தை உயர்த்தியிருக்கின்றது. கிட்டத்தட்ட ஆறாண்டுகால ஆட்சியில், 31 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கியதின் விளைவாக, குக்கிராமத்தில் குடிசைகளில் வாழ்கின்ற மாணவ, மாணவிகள்கூட உலகப் பொது அறிவு பெறக்கூடிய விஞ்ஞானக் கல்வியை கொடுத்த ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்கள் 100-க்கு 44.3 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக் கூடியவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
சுகாதாரத் துறையில், இந்தியாவிலேயே முதன்மை வகிக்கின்ற துறையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. கிராமப்புறத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, அங்கேயே சிகிச்சை அளிக்கக்கூடியவகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும், தரம்உயர்த்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அம்மாவினுடைய அரசு வழங்கியிருக்கின்றது. சுகாதாரத் துறையில், இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களால் கட்டப்பட்ட எஃகு கோட்டை, மாபெரும் இயக்கம் என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். இதிலிருந்து ஒரு கல்லைக்கூட உங்களால் அசைக்க முடியாது என்பதை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றும் தேர்தல் இது ம.பி. கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
19 Apr 2024போபால், தற்போது நடைபெறுவது அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவை மாபெரும் உலக சக்தியாக மாற்றுவதற்கான தேர்தல் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.