எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நெல்லை : பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படும் என்றும் தமிழகத்தில் குடிமராமத்து பணிக்கு அடுத்தக்கட்டமாக மேலும் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் நெல்லை விழாவில் முதல்வர் எடப்பாடி அறிவித்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். பிறகு விழா மேடையில் எம்.ஜி.ஆர். திரு உருவப்படத்தை முதல்வர் திறந்து வைத்தார். அதன் பிறகு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றபொழுது, நானும், துணை முதலமைச்சரும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் செயல்படுவோம் என்ற ஒரு கருத்தைச் சொன்னேன். நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்ற கருத்தை மக்களிடையே எடுத்து வைத்தோம். இதில் ஸ்டாலின் என்ன குறைகண்டு பிடித்தார் என்று தெரியவில்லை. அவர் பேட்டி கொடுக்கும்பொழுது, உள்ளக்குமுறலோடு அவர் வெளிப்படுத்திய கருத்து என்னவென்று ஊடகங்கள், பத்திரிகை வாயிலாக நாம் பார்த்தோம், உங்களுக்கும் தெரியும். எந்தளவிற்கு அவர் விமர்சனம் செய்துள்ளார், எந்தளவிற்கு எங்கள் மீது கோபம் கொண்டுள்ளார் என்பது அவருடைய உள்ளக்குமுறலில் இருந்து நாங்கள் பார்க்க முடிகிறது.
கானல்நீராகத்தான் இருக்கும்
ஆகவே, நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். ஏனென்று சொன்னால், இந்த இயக்கம் ஒன்றாக இருக்கக்கூடாது, இந்த இயக்கத்தை உடைக்க வேண்டும், இந்த ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமென்று பலரின் துணையோடு அவர் கனவு கண்டு கொண்டிருக்கின்றார். அவர் கனவு கானல்நீராகத்தான் இருக்கும் என்பதை இந்த நேரத்திலே சுட்டிக்காட்டுகின்றேன். எவ்வளவு இன்னல்கள், துன்பங்கள் இருந்தாலும் நாங்கள் இணைந்து செயல்பட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிலே நாம் சபதம் ஏற்போம். இருபெரும் தலைவர்களுடைய லட்சியத்தை நிறைவேற்றுவதே நம்முடைய இலட்சியம்.
அதேபோல, புயல், வெள்ளம், வறட்சி எது வந்தாலும் சரி, மக்கள் பாதிக்கப்பட்டால், எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா ஆட்சிக்காலத்திலும் சரி, மக்களுக்கு ஓடோடிப் போய் உதவி செய்கின்ற ஆட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி என்பதை மக்கள் உணருவார்கள். ஆகவே, இந்த இயக்கம் மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். மக்களுக்கு சேவை செய்கின்ற இயக்கம். இவர்களைப்போன்று, ஒரு குடும்பத்திற்காக ஆட்சி செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி அல்ல. நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற ஆட்சி இந்த ஆட்சி.
அதேபோல, இருபெரும் தலைவர்கள் எப்படி கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கும் திட்டப்பணிகளை எடுத்துச் சென்றார்களோ அதேபோல அம்மாவினுடைய அரசும், கடைக்கோடியில் இருக்கின்ற மக்களுக்கு திட்டப்பணிகளை எடுத்துச் செல்வதில் இரவு பகல் பாராமல் உழைத்து முதன்மையாக விளங்கிக் கொண்டிருக்கின்ற அரசு இந்த அரசு.
மேலும் ரூ.300 கோடி ஒதுக்கீடு
விவாசாய பெருங்குடி மக்கள் பயன்பெற வேண்டுமென்பதற்காக நீண்ட நாட்களாக விவசாயிகள் அரசுக்கு விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக குடிமராமத்து என்னும் அற்புதமான திட்டத்தை அம்மாவினுடைய அரசு துவக்கி, முதற்கட்டமாக ரூபாய் 100 கோடி ஒதுக்கீடு செய்து, 1519 ஏரிகளில் பணிகள் துவங்கப்பட்டு இன்றைக்கு நிறைவடைந்திருக்கின்றன. அடுத்தகட்டமாக ரூபாய் 300 கோடி குடிமராமத்துப் பணிகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது.
அதன்மூலம், பல்லாயிரக்கணக்கான ஏரிகள் தூர்வாரப்படும். அதுமட்டுமல்லாமல், சமூக ஆர்வலர்கள், நாட்டின் மீது அக்கறை கொண்டவர்கள் எல்லாம் குடிமராமத்து திட்டத்தில் பங்குபெற்று அவர்களும் சொந்த செலவிலே ஏரி, குளங்களில் வண்டல் மண்ணை அள்ளுவதற்கு உதவி செய்தார்கள். விவசாயப் பெருங்குடிமக்களும், விவசாய பிரதிநிதிகளும் ஆங்காங்கே ஏரி, குளங்களில் இருக்கின்ற வண்டல் மண்ணை இலவசமாக எடுத்து, தங்கள் நிலங்களுக்கு எருவாக இட்டார்கள்.
ஆகவே, இந்தத் திட்டம் ஒரு மிகப்பெரிய, பிரம்மாண்டமான திட்டம். விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகின்ற திட்டம். இத்திட்டம் மூலமாக, பருவமழை பொழிகின்றபொழுது கிட்டத்தட்ட 30 சதவீதம் நீர் தேங்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கித்தந்த அரசு அம்மாவினுடைய அரசு என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சொல்லிக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
ஒரு மனிதனுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு விவசாயிகளுக்கு உயிராக இருப்பது நீர். அந்த நீரை செறிவூட்டுவதற்காக கிட்டத்தட்ட ரூபாய் 1000 கோடி அம்மாவினுடைய அரசால் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு மூன்றாண்டுகளில் தடுப்பணை கட்டும் பணி துவங்கப்படும். முதற்கட்டமாக இந்த ஆண்டு ரூபாய் 350 கோடி தடுப்பணை கட்டுவதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலமாக ஓடைகள், ஆங்காங்கே இருக்கின்ற நதிகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு பருவமழையில் பொழிகின்ற நீரை தேக்கி வைத்து, நிலத்தடி நீரை உயரச் செய்வதற்கு அம்மாவினுடைய அரசு திட்டங்கள் தீட்டி, செயல்படுத்திக் கொண்டிருக்கின்றது.
அதேபோல, கல்வியிலே அம்மாவினுடைய அரசு புரட்சி கண்டுள்ளது. கடந்த ஆறாண்டுகளில் எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அதிகமாக கல்லூரிகளை தொடங்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். அம்மாவினுடைய பொற்கால ஆட்சியில்தான் கிட்டத்தட்ட அரசு 65 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தமிழ்நாட்டிற்குத் தந்தார்கள். ஏழை, எளிய மாணவர்கள் தங்கள் பகுதியிலேயே குறைந்த கட்டணத்தில் உயர்கல்வி கற்கக்கூடிய சூழ்நிலையை அம்மா உருவாக்கித் தந்திருக்கின்றார்கள். அம்மாவினுடைய அரசும் இந்த ஆண்டு 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்திருக்கின்றது.
ஆக, அம்மாவினுடைய அரசு, கடந்த ஆறாண்டுகளில் 76 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்து கல்வித்தரத்தை உயர்த்தியிருக்கின்றது. கிட்டத்தட்ட ஆறாண்டுகால ஆட்சியில், 31 லட்சம் பேருக்கு மடிக்கணினிகள் வழங்கியதின் விளைவாக, குக்கிராமத்தில் குடிசைகளில் வாழ்கின்ற மாணவ, மாணவிகள்கூட உலகப் பொது அறிவு பெறக்கூடிய விஞ்ஞானக் கல்வியை கொடுத்த ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. இன்றைக்கு உயர்கல்வி படிப்பவர்கள் 100-க்கு 44.3 சதவீதமாக உயர்ந்து, இந்தியாவிலேயே உயர்கல்வி படிக்கக் கூடியவர்களுடைய எண்ணிக்கை உயர்ந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.
சுகாதாரத் துறையில், இந்தியாவிலேயே முதன்மை வகிக்கின்ற துறையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. கிராமப்புறத்தில் வசிக்கின்ற மக்களுக்கு, அங்கேயே சிகிச்சை அளிக்கக்கூடியவகையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும், தரம்உயர்த்தப்பட்ட, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களை அம்மாவினுடைய அரசு வழங்கியிருக்கின்றது. சுகாதாரத் துறையில், இந்தியாவிலேயே முதன்மையாக விளங்குகின்ற மாநிலம் தமிழ்நாடு.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றரை கோடி தொண்டர்களால் கட்டப்பட்ட எஃகு கோட்டை, மாபெரும் இயக்கம் என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். இதிலிருந்து ஒரு கல்லைக்கூட உங்களால் அசைக்க முடியாது என்பதை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.