முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவார் - அசாருதீன் நம்பிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் : டோனி 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடுவார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஓய்வு குறித்து டோனி மனதில் என்ன இருக்கிறது என்பது பற்றி தெரியவில்லை. அனேகமாக அவர் 2019-ம் ஆண்டு உலக கோப்பையில் விளையாடுவார் என்று கருதுகிறேன். அந்த போட்டி தொடரோடு ஓய்வு பெறுவார் என்று நினைக்கிறேன். அவரது எதிர்காலம் குறித்து அவர் முடிவு செய்ய விட்டுவிட வேண்டும்.

வருங்காலத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையே போட்டி தொடர் நடக்கும் என்று கருதுகிறேன். ஆனால் தற்போதைய எல்லை பிரச்சினை சூழ் நிலைகளை கருத்தில் கொள்ளவேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து