முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10,12 ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற ஆதிதிராவிடர் , பழங்குடியினமாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தேனி கலெக்டர் வெங்கடாசலம் வழங்கினார்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      தேனி
Image Unavailable

தேனி.-  தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,   தலைமையில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பொதுமக்களிடமிருந்து 141 பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக்கூலி உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டா மாறுதல், கல்விக்கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல், காவல்துறை தொடர்பான மனுக்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் வாரிசுதாரர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள்.
பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதனை உடனடியாக விசாரணை மேற்கொண்டு அவர்களுக்கு எந்தவித காலதாமதமின்றி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்குமாறும், மேலும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு மனுக்கள் மீதும், மக்கள் குறைதீர்க்கும் நாளில் பெறப்பட்ட மனுக்கள், முன்னாள் படைவீரர் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, மனுதாரர்களுக்கு உரிய காலத்தில் பதிலளிக்குமாறு துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  அவர்கள் கேட்டுக்கொண்டார்.
இக்கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில், 2016-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவியர்களிடையே மாநில அளவில் பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவியர்களுக்கு டாக்டர் அம்பேத்கார் தேசிய தகுதி கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு தேர்வில் 497 மதிப்பெண்கள் பெற்ற ரூபன்ஐஸ்வர்யம் என்ற மாணவிக்கு ரூ.50,000 -த்திற்கான காசோலையினையும், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 1174 மதிப்பெண்கள் பெற்ற கண்ணகி என்ற மாணவிக்கு ரூ.20,000 -த்திற்கான காசோலையினையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து 1 பயனாளிக்கு விலையில்லா தையல் இயந்திரத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம்,   வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  செ.பொன்னம்மாள்   உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து