முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனுஸ்கோடி கடல் பகுதியில் இலங்கையை சேர்ந்த மர்ம படகு: மாநில உளவுப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை.

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமேசுவரம்,- தனுஸ்கோடி கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இலங்கை பகுதியை சேர்ந்த மர்ம பிளாஸ்டிக் படகு குறித்தும்,படகில் வந்த கடத்தல்காரர்கள் குறித்தும் மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்கள் அப்பகுதியில்  தீவிர விசாரணை செய்து வருகின்றனர். 
ராமேசுவரம் பகுதியிலிருந்து 22 கி.மீ தொலை தூரத்திலும்,இலங்கைக்கு மிகவும் அருகாமையிலுள்ள தனுஸ்கோடி  கடலோரப்பகுதியில் அமைந்துள்ளது.இதனால் இலங்கை பகுதியிலிருந்து அவ்வொப்போது மர்ம படகு.கடத்தல் பொருள்கள் வந்த நிலையில் உள்ளது.இந்த நிலையில் நேற்று திங்கள் கிழமை தனுஸ்கோடி கடலோரப்பகுதியான ஒத்ததழை கடல்கரைப்பகுதியில் மர்ம பிளாஸ்டிக் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளதாக ராமேசுவரம் பகுதியை சேர்ந்த மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்களுக்கு தகவல்கள் வந்துள்ளது.அதன் பேரில் அப்பகுதிக்கு மண்டபம் கடலோரப்பாதுகாப்பு போலீஸார்கள் மற்றும் மத்திய,மாநில உளவுப்பிரிவு போலீஸார்கள் அப்பகுதியில் விரைந்து சென்றனர்.பின்னர் கடலில் நிறுத்தப்பட்டிருந்த மர்ம படகை மண்டபம் கடலோரப்பாதுகாப்பு போலீஸார்கள் கைப்பற்றினர்.அதன் பின்னர் இப்படகை போலீஸார்கள் பார்வையிட்டு சோதனையிட்டனர்.இதில் இப்படகில் கண்டிப்பாக மர்ம கடத்தல்காரர்கள் வந்திருக்கலாம் என போலீஸார்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து போலீஸார் இது குறித்து வழக்கு பதிந்தனர்.பின்னர் அப்பகுதி மீனவர்களிடம் மர்ம படகு வந்தது குறித்து விசாரணை செய்தும்,ராமேசுவரம் பகுதியை சேர்ந்த முன்னாள் கடத்தல்காரர்களை போலீஸார்கள் விசாரணை செய்து  கண்காணித்து  வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து