எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நீட் உள்பட போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். முதற்கட்டமாக 100 பயிற்சி மையங்களில் தொடங்கும் வகுப்புகள், வெகுவிரைவில் 400 ஆக உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்க விழா சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் எம்.ஜி.ஆர் நகர். அம்பத்தூர் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கையேடுகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தகுதி நுழைவு போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எவ்வித தயக்கமும், தளர்வும் இல்லாமல் உறுதியான எண்ணத்தோடு எதிர்கொள்ளும் வகையில் அரசு எடுத்த முடிவின்படி தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையும், ஸ்பீடு அறக்கட்டளையும் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, அது இன்று செயல் வடிவம் பெறுகிறது. இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவர் இதுவரை இப்பயிற்சிக்காக இணையதளம் வாயிலாக 73 ஆயிரம் மாணவர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.
412 மையங்கள் பயிற்சி
மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் இத்திட்டமானது இவ்வாண்டு 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இப்பயிற்சி மையத்தினை, ஒன்றியத்திற்கு ஒரு மையம் என்ற வீதத்தில் தமிழ்நாட்டில் மொத்தமாக 412 மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. இன்றைய தினத்தில் முதல் கட்டமாக 100 மையங்களில் இப்பயிற்சி தொடங்கப்படுகிறது. மிக விரைவில் மீதமுள்ள 312 மையங்களும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மாணவர்களிடமிருந்து எவ்வித கட்டணத்தையும் பெறாமல் பிளஸ் 2 வகுப்புக்கு பின் தொழில்சார் பட்டப் படிப்புகளில் சேரவிருப்பம் உள்ள மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
தினந்தோறும் வகுப்பு
மேலும் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் பாடப் பொருளை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் அவர்களை பயிற்று மொழியிலேயே மிகச் சிறந்த பாட வல்லுநர்களைக் கொண்டு இப்பாடங்கள் நடத்தப்படும். இதற்கான பாடப் பகுதிகள் மாணவர்களுக்கு 30 புத்தகங்களாக வழங்கப்படும். பள்ளிகளில் பெறும் கல்விச் செயல்பாடுகளில் எவ்விதத் தேக்கமும் அடையா வண்ணம், மாணவர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பள்ளி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், பொதுத் தேர்வு முடிவடைந்த பிறகு தினந்தோறும் இதே நேரத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சரியான முறையில் பயிற்சி
இப்புத்தகத்தில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் கொள்குறி வகை வினாக்களும் மற்றும் அதன் பாடப் பொருட்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் அனைத்திந்திய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி நிறையவே எழுந்து கொண்டிருக்கின்றன. நான் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லுவேன். தற்பொழுது உள்ள நம் மாநில பாடத் திட்டம் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பாடத் திட்டத்திற்கும் சளைத்தது அல்ல. அத்தகைய போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் நம் மாணவர்களுக்கு சரியான முறையில் பயிற்சி அளிப்பதே தற்போதைய தேவையாகும்.
எந்த பயிற்சியும் தேவையில்லை
அம்மாவின் அரசு அதற்கான அடித்தளத்தை மாணவர்களுக்கு அமைத்துக் கொடுக்கிறது. முயற்சியும், பயிற்சியும் முறையாக இருந்தால் முன்னேறுவது உறுதி என்பதால்தான் இன்றைய தினம் முறையான பயிற்சியை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை நாம் முன்னெடுத்து இருக்கிறோம். மிகச் சிறந்த வல்லுநர்களைக் கொண்டு இப்பயிற்சி கட்டணமின்றி வழங்கப்பட உள்ளதால், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேறு எந்தப் பயிற்சியும் எடுத்துக் கொள்ள தேவையும் இல்லை. அதற்கென வேறு எந்த செலவினமும் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. மாணவா்களாகிய நீங்கள் எந்த நேரத்திலும் ஏன்? எதற்கு? எப்படி? எங்கே? எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளை உங்களுக்கு துணையாக அழைத்துச் செல்லுங்கள். உங்களை சறுக்கி விழாமல் தாங்கிப் பிடிக்கும் தூண்களாக அவை செயல்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இலக்கினை நோக்கிய பயணம் எத்தகையது என்பது முக்கியமல்ல. நீ, உன் இலக்கினை நோக்கி, இடையூறுகளை தகர்த்து எப்படி முன்னேறிக் கொண்டிருக்கிறாய் என்பதே முக்கியம். அரசும், அதன் அங்கமாகிய ஆசிரியர்களாகிய உங்களுக்கு நல்ல பாதையை மட்டுமே காட்ட முடியும். ஆனால் நீங்கள்தான் அந்தப் பாதையில் எங்ஙனம், எவ்வளவு தூரம் செல்ல முடியுமென முடிவு செய்து முன்னேற உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஆகவே தான் முயலுக்கும் ஆமைக்குமான போட்டியில் முயலும் வெல்லலாம், ஆமையும் வெல்லலாம். ஆனால் ஒருபோதும் முயலாமை வெல்லாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஒரு செயலை தொடங்கும் போதே, என்னால் முடியாது என நினைத்து தொடங்காதீர்கள் என்னால் முடியாவிட்டால் இவ்வுலுகில் வேறு யாரால் முடியும் என்ற எண்ணத்தில் செயலைத் தொடங்குங்கள். வெற்றி நிச்சயம். “மாற்றத்திற்கான தொடக்கமே முன்னேற்றத்திற்கான அடையாளம்” என்பார்கள் ஆழ உழாத நிலமும், ஆழ்ந்து படிக்காத மனமும் ஆக்கம் பெறுவதில்லை. ஆகவே எதையும் ஆழ்ந்து படிக்க கற்றுக் கொள்ளுங்கள். அவ்வாறான ஆழ்ந்த கற்றலில் புரியாததை புரிந்து கொள்ளுங்கள். புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள். முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை.
வைராக்கியத்தோடு செயல்படுங்கள்
ஆகவேதான் முயற்சியை பற்றி கூறும் போது தெய்வப்புலவா திருவள்ளுவா, “அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்” அதாவது எந்த ஒரு செயலையும் செய்ய ஆரம்பிக்கும் போது, இதை நம்மால் செய்ய இயலாது என்று மனத்தளர்ச்சி அடைந்து சோர்வு கொள்ளல் ஆகாது. என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற மன வைராக்கியத்தோடு செயல்படுங்கள். மூச்சு விடுபவன் - மனிதன் மூச்சை அடக்குபவன் - ஞானி, மூச்சே போகும் என்றாலும் முயற்சியை கைவிடாதவன் தான் - மாமனிதன்”அத்தகைய மாமனிதனே உலகை வெல்லப் பிறந்தவன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்ற கூற்றிற்கிணங்க, உங்களின் முழு ஆற்றலையும் வெளிக்கொணா்ந்து, தமிழ்நாடு அரசால் அளிக்கப்படும் இந்தப் பயிற்சியின் துணை கொண்டு, எதிர்வரும் போட்டித்தேர்வுகளில் வெற்றி பெற்று, நீங்களும் உயர்ந்து, நம் தமிழ் சமுதாயத்தையும் உயர்த்திட வேண்டும்.
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.