எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, போட்டித்தேர்வுக்கான கேள்விகளை எதிர்கொள்வது எப்படி என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குரு - சிஷ்யர்கள் குறித்த குட்டிக்கதை கூறி விளக்கினார்.
இது குறித்து சென்னையில் நடைபெற்ற போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து, கையேடு ஒன்றை வெளியிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறிய கதை வருமாறு:-
தேர்வுகளுக்கு உள்ள வேறுபாடு
ஆண்டு பொதுத் தேர்வுக்கும் மாணவர்கள் கடினம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போட்டி தேர்வுகளுக்கும் அப்படி என்னதான் வேறுபாடு என எண்ணிப் பார்த்த பொழுது, எனக்கு ஒரு சிறிய கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஊரில் அனைத்து கலைகளையும் கற்றுத் தேர்ந்த குரு ஒருவர் வாழ்ந்து வந்தார். அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட மூன்று மாணவர்கள், அக்குருவிடம் சீடர்களாக சேர வருகிறார்கள். குருவினை வணங்கி, தங்கள் விருப்பத்தினை அவரிடம் தெரிவிக்கின்றனர். பொறுமையாக அவர்கள் கூறுவதை கேட்ட குரு, அவர்களிடம், நாளை வாருங்கள் பார்க்கலாம் என்று கூறி அவர்களை அனுப்பி வைக்கிறார்.
முதல் மாணவன்...
பின், அவர் தன் மனைவியிடம், நாளை அந்த மாணவர்கள் வரும்போது, “நேற்று இரவு குரு உறங்கி கொண்டிருந்த போது அவர் காதில் ஓணான் ஒன்று புகுந்து கடித்ததால், குரு இறந்து விட்டார் என்று தெருவிக்குமாறு கூறுனார். அடுத்த நாள், அவர்களில் முதலாவதாக வந்த மாணவனிடம் குருவின் மனைவி, குரு சொன்னதை அப்படியே சொல்கிறார். அதைக் கேட்ட அம்மாணவன், “ஓ! அப்படியா, அவரின் ஜாதகப்படி இம்மாதத்தில் அவருக்கு ஒரு கண்டம் இருந்தது. அதனால்தான் அவர் இறந்து இருப்பார் என்று தன்னைத்தானே தேற்றிக் கொண்டு திரும்பிச் சென்று விடுகிறான்.
2-வது மாணவன்...
சிறிது நேரத்தில் அங்கு வந்த இரண்டாம் மாணவனிடமும் குருவின் மனைவி அதே செய்தியை கூறுகிறார். இரண்டாம் மாணவரும், “ஓ! குரு இறந்து விட்டாரா, அவரிடம் கல்வி கற்க ஆவலுடன் இருந்தேன். சரி வேறு ஒரு குருவினைத் தேடி அவரிடம் கல்வி கற்றுக் கொள்கிறேன்”, என்று கூறி திரும்பிச் சென்று விடுகிறார். மூன்றாம் மாணவனிடமும், அதே செய்தியை குருவின் மனைவி சொன்ன போது, அம்மாணவன் சற்று யோசித்துவிட்டு, “மன்னிக்கவும், தாங்கள் பொய் சொல்வதாக நினைக்கிறேன். குரு இறப்பதற்கான வாய்ப்பில்லை”, என்று கூறுகிறான்.
ஏற்றுக் கொள்கிறேன்
மறைவிலிருந்து இதனைக் கேட்டுக் கொண்டிருந்த குரு, “ஆஹா, நீயே சரியான மாணவன் ! உன்னை நான் என் சீடனாக ஏற்றுக் கொள்கிறேன்”, என்றார். குருவின் மனைவி ஆச்சரியத்துடன், அந்த மாணவனைப் பார்த்து, “குரு இறக்கவில்லை என்பதை நீ எவ்வாறு அறிந்தாய்?” எனக் கேட்கிறார். அதற்கு அந்த மாணவன், “தாயே, தங்கள் கணவர் இறந்ததாக தாங்கள் கூறிய போது உங்கள் முகத்தில் எந்தவிதமான துக்கத்தின் சாயலையும் நான் பார்க்கவில்லை. மேலும் ஒரு மனிதனின் காதில் ஓணான் நுழைவதற்கு வாய்ப்பில்லை. அப்படியே நுழைந்து கடித்தாலும் அதனால் உயிருக்கு எவ்வித ஆபத்தும் வராது என்பதாலேயே, குரு இறக்கவில்லை என்று நான், உறுதியாகக் கூறினேன்”, என்றான்.
பகுத்தாய்ந்து அறிதல்
மாணவச் செல்வங்களே, இக்கதையில் வரும் முதல் மாணவன் தன் மதியை நம்பாமல், விதியை நம்பி சென்று விடுகிறான். இரண்டாம் மாணவன், தான் கேட்ட செய்தியின் உண்மைத் தன்மையை அறியாமல், குருவின் மனைவி சொன்னதே உண்மை என்று எண்ணி, குரு இறந்து விட்டார். இனி என்ன செய்வது? என்ற கேள்விக்கு இறந்த மனிதரிடம் சீடராக சேர முடியாது. ஆகவே வேறு குருவை தேடிக் கொள்வோம் என்ற யதார்த்த் சிந்தனையுடன் சென்று விடுகிறார். மூன்றாம் மாணவரிடம், அதே கேள்வி கேட்கப்பட்டபோது உடனே அம்மாணவன், அச்செய்தியில் உள்ள உண்மைத் தன்மையை அறிய, ஏன்? எதற்கு? எங்கே? எப்படி? எப்பொழுது? யாரால்? என்ற கேள்விகளின் துணை கொண்டு பகுத்தாய்ந்து, குரு இறக்கவில்லை, இறக்க வாய்ப்பில்லை என்ற உறுதியான நிலைபாட்டினை எடுக்கிறார். இத்தகைய சிந்தனையே போட்டித் தேர்வுகளுக்கான கேள்விகளை எதிர்கொள்ள தேவையானதாகும்.
இவ்வாறு அவர் அந்த குட்டிக்கதையை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.