முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பிலிப்பைன்ஸ் அதிபர் இந்தியா வருகிறார்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

மணிலா: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

ஆசியான் அமைப்பின் 31-வது உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர்  மணிலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அங்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் ஆகியோரை மோடி, சந்திந்துப் பேசினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் இந்தியா வர சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (கிழக்கு) செயலாளர் ப்ரித்தி சரண் கூறியபோது, "இந்தியா- பிலிப்பைன்ஸ் இரு நாட்டுத் தலைவர்களும், இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுக்கு வர பிரதமர் மோடி விடுத்த அழைப்பை பிலிப்பைன்ஸ் அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து