முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரமேரூரில் குழந்தைகள் தின விழா

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      காஞ்சிபுரம்
Image Unavailable

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் ஊராட்சி ஒன்றிய முன்மாதிரி நடுநிலை பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவில் பேரூராட்சியின் செயல் அலுவலர் கேசவன் தலைமை தாங்கினார்.

 இனிப்பு

பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் குழந்தைகள் தின விழா குறித்து பள்ளி மாணவ-மாணவியர்களுக்கிடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மழை கால நோய் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து அங்கன்வாடி குழந்தைகள் பேரூராட்சி திடக்கழிவு மேளாண்மை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மக்கா குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட தொடர் இரயில் பெட்டியில் குழந்தைகள் அமர்ந்து பள்ளி வளாகத்தினை சுற்றி வந்தனர். பின்னர் குழந்தைகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து