முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்கொரியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு

புதன்கிழமை, 15 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

சியோல், தென்கொரியாவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.

தென்கொரியாவில் நேற்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது.  தென்கிழக்கு கரையோரம் இருக்கும் போஹாங் நகரின் வடக்கில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகின்ற இடத்திலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தென்கொரியாவின் தலைநகர் சியோலிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கட்டிடங்களும் குலுங்கியதாக மக்கள் மிரட்சியுடன் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தினால் இலேசான பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அப்பகுதியில் உள்ள அணு உலைகளுக்கு இந்த நிலநடுக்கத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என சில தகவல்கள்  வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து