முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவசாயிகளின் குரலுக்கு வலுசேர்க்க நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள்

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை - விவசாயிகளின் குரலுக்கு வலு சேர்க்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சில தினங்களாக களத்துக்கே சென்று மக்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள கமல், கடந்த சில நாள்களுக்கு முன்பு எண்ணூர் கழிமுகப் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து விவசாயிகளையும் அவர் சந்தித்து பேசினார். இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு குரல் சேர்க்க வேண்டும் என நடிகர் கமல் டுவிட்டரில் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிடுகையில், விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார்? அவர்கள் குரலை வலுப்பெறச் செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து