எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாடு மின்சார வாரியம் மின் மீட்டரை குறைந்த விலைக்கே கொள்முதல் செய்கிறது என்று ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் தங்கமணி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மின் மீட்டர் கொள்முதல் செய்ததில் எந்த நஷ்டமும் ஏற்படவில்லை என மின்வாரியமும் விளக்கம் அளித்துள்ளது.
மின்மீட்டர் கொள்முதல் குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். மின்மீட்டர் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஸ்டாலின் எழுப்பியுள்ள புகார்களுக்கு அமைச்சர் தங்கமணி பதிலளித்து நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம் வருமாறு:-
ஒப்பந்தப்புள்ளி முடியவில்லை
மின்மீட்டர் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளியே இன்னும் முடியவில்லை. அதற்குள் ஊழல் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை வழங்குகிறார். யார் பெயருக்கு கொள்முதல் ஒப்பந்தப்புள்ளி கொடுக்கப்பட்டது என்று ஸ்டாலின் சொல்ல தயாரா? தொழிற்நுட்ப காரணங்களுக்காக ஒரு கம்பெனியின் டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த குறிப்பிட்ட கம்பெனி நி்ர்வாகத்தினரே அதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர்.
ஒப்பந்தப்புள்ளியில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. நேர்மையாக ஒப்பந்தப்புள்ளிகள் நடந்து வருகின்றன. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் தவறான தகவல்களை வழங்குகிறார். 2006 ஆம் ஆண்டு முதல் 35 ஆயிரம் கோடி கூடுதல் கடனில் தள்ளியவர்கள் திமுகவினர். மின்வெட்டு இருட்டில் தள்ளிய தி.மு.க. ஆட்சிக்கு விடை கொடுத்ததோடு மட்டுமில்லாமல், உபரி மின்சார உற்பத்திக்கு வித்திட்டார்.
தவறான தகவல்களை கூறுகிறார்
தி.மு.க. ஆட்சியில் இருந்த கடனில் பெரும்பகுதியை குறைத்து சாதனை படைத்தார் முதல்வர் ஜெயலலிதா. இப்படியிருக்க எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான தகவல்களை கூறி மக்களை பீதியில் ஆழ்த்துகிறார் என்று மின்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
பகிர்மானக்கழகம் விளக்கம்
இந்நிலையில், மின் மீட்டர் கொள்முதல் குறித்து ஒப்பந்த புள்ளிகள் வழங்கியவர்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் மின்வாரியத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனத்தின் ஒருதலைபட்சமான குற்றசாட்டின் அடிப்படையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒருமுனை மின்மீட்டர் கொள்முதல் செய்ய கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திடம் தகவல்கள் எதுவும் பெறப்படாமல் செய்திகள் ஊடகங்களால் வெளியிடப்பட்டுள்ளது.
அவப்பெயரை ஏற்படுத்த...
இந்த ஒப்பந்தப்புள்ளியில், விலைப்புள்ளி திறக்கப்பட்டு, விலை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கும் நிலையிலும் மற்றும் ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படாத நிலையிலும் கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு மக்கள் மத்தியில் அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரச்சாரம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தப்புள்ளியின் உண்மை விவரம்
பின்வருமாறு:
மின்னணு ஒப்பந்தப்புள்ளி விவரக்குறிப்பேடு எண். 52/16-17-ல் 29.88 லட்சம் ஒருமுனை 5-20 ஆம்ஸ் நிலைத்த மின் அளவிகளை கொள்முதல் செய்ய கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொண்ட 13 ஒப்பந்தப்புள்ளிதாரர்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக விவரங்கள் கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி திறக்கப்பட்டது. 13 ஒப்பந்தப்புள்ளிதாரர்களிடமிருந்து பெறப்பட்ட ஏலத்தகுதி, தொழில்நுட்ப மற்றும் வணிக தகுதி ஆவணங்கள் ஆராயப்பட்டது.
விலைப்புள்ளி திறக்கப்படவில்லை
ஒப்பந்தப்புள்ளியின் தொழில்நுட்ப தேவைகளின்படி ஒப்பந்தப்புள்ளிதாரர்கள் கொடுத்த மாதிரி மின் மீட்டர்கள் தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யாவிடில் அவர்களின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்பட்டு விலைப்புள்ளி திறக்கப்படமாட்டாது. கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் மற்றும் இதர 5 நிறுவனங்கள் மின்வாரிய தொழில்நுட்ப தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. எனவே, அவர்களின் ஒப்பந்தப்புள்ளி நிராகரிக்கப்பட்டு விலைப்புள்ளி திறக்கப்படவில்லை. தமிழ்நாடு ஒளிவுமறைவற்ற ஒப்பந்தப்புள்ளி சட்டத்தின்படி ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டவுடன்தான் அதன் தகவல் நிராகரிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
உண்மைக்கு புறம்பான செய்தி
113 ஒப்பந்தப்புள்ளிதாரர்களில் ஒப்பந்தப்புள்ளியின் அனைத்து தேவைகளை பூர்த்தி செய்த 7 நிறுவனங்களின் விலைப்புள்ளிகள் கடந்த 3-ம் தேதி திறக்கப்பட்டது. குறைந்த விலை சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிதாரருடன் விலை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படாமல் இருக்கும் நிலையில் கேபிடல் பவர் சிஸ்டம் லிமிடெட் நிறுவனம் இந்த ஒப்பந்தப்புள்ளி ரூ.495-க்கு இறுதி செய்யப்பட்டதாகவும் அதனால் வாரியத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் கூறி விளம்பரப்படுத்துவது உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
இதற்கு முன்னர் கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியில் மின்மிட்டர்கள் ரூ.453-க்கு கொள்முதல் செய்ய ஆணைகள் ஜீன் 2017-ல், அதாவது மூன்று மாதத்திற்கு முன்புதான் வழங்கப்பட்டதால் தற்போது கோரப்பட்டுள்ள ஒப்பந்தபுள்ளியில் குறைவான விலை சமர்ப்பித்த ஒப்பந்தப்புள்ளிதாரருடன் மேற்கண்ட விலைக்கு சமமாக குறைத்து கொடுக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் இந்த ஒப்பந்தப்புள்ளி இதுவரை இறுதி செய்யப்படவில்லை. இந்த ஒப்பந்தப்புள்ளி மேற்கண்ட விலை பெறாவிடில் இறுதி செய்யப்படமாட்டாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.