எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டம், மல்லிகை அரங்கில் இன்று (15.11.2017) ‘உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர், தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.செல்வகுமாரசின்னையன் (ஈரோடு), திருமதி.வி.சத்தியபாமா (திருப்பூர்), சட்டமன்ற உறுப்பினர்கள் கே.வி.இராமலிங்கம் (ஈரோடு மேற்கு), கே.எஸ்.தென்னரசு (ஈரோடு கிழக்கு), சு.ஈஸ்வரன் (பவானிசாகர்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்கள், கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் மற்றும் பயனாளிகள் என 785 நபர்களுக்கு கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூ.10.28 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்கள்.
இவ்விழாவில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்ததாவது
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியுள்ளார்கள். இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலுமே வறட்சி ஏற்பட்டால் நிவாரணம் வழங்கியதில்லை. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கியுள்ளார்கள். மேலும் விவசாயிகளின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு வசதியாக பயிர் காப்பீட்டு திட்டத்தைக் கொண்டு வந்துள்ளார்கள். இத்திட்டத்தின் மூலம் வறட்சி மற்றும் வெள்ளம் ஏற்படும் காலங்களில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் பால் கூட்டுறவு சங்கங்கள் சிறந்த சங்கங்களாக செயல்பட்டு மாநிலத்தில் முதலிடத்தில் உள்ளது. கூட்டுறவு துறையின் மூலமாக கடன் வாங்கும் நிலைகள் மாறி பல்வேறு மாற்றங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதன்படி விவசாயிகளின் நலனுக்காக ஏரி, குளங்களை தூர்வாரப்பட்டு, மழைநீர் சேகரிக்கப்பட்டு விவசாயத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய நலத்திட்டங்களை வழங்கும் அரசிற்கு உறுதுணையாக இருப்பதோடு, இக்கூட்டுறவுச் சங்கங்கள் மேன்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு சுற்றுச்சூழல் துறைஅமைச்சர் கே.சி.கருப்பணன் பேசியதாவது,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று சிறப்பான முறையில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா உற்பத்தியாளர் முதல் நுகர்வோர் வரை கூட்டுறவுகள் என்ற தலைப்பில் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்கள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள், பால் உற்பத்தியாளர்கள் என அனைவருக்கும் தேவையான அனைத்தும் கிடைக்க சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். விவசாய கடன் பெற்ற விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில் கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்கடன், நடுத்தர கால வேளாண்மை கடன் மற்றும் பண்ணை சார்ந்த நீண்டகால கடன் என அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளார்கள்.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி ரூ.25,000 முதல் ரூ.25 இலட்சம் வரை கடனுதவி மற்றும் 3-ல் ஒரு பங்கு மானியம் வழங்கி வருமானம் ஈட்டிட வழிவகை செய்து கொடுத்துள்ளார்கள். விவசாயிகளுக்கு பூஜ்ஜிய சதவீதம் வட்டி முறையில் பயிர்கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்ட கூட்டுறவு சங்கம் மாநில அளவில் 2-ம் இடம் பெற்றுள்ளது. இன்றையதினம் கடனுதவிகள் பெறும் பயனாளிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கடனுதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கை தரத்தினை உயர்த்திக்கொள்ளமாறு வாழ்த்துகிறேன் என அனைவரும் எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
இவ்விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது,
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா கூட்டுறவு துறையின் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியினை வழங்கி வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளார். ஒவ்வொருவரும் அனைவருக்காக, அனைவரும் ஒவ்வொருவருக்காக” என்ற கொள்கையினைத் தாரக மந்திரமாகக் கொண்டது கூட்டுறவு அமைப்பாகும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் அனைத்து சேவைகளையும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான முறையில் வழங்கப்பட்டு அரசின் அனைத்து திட்டங்களும் நன்முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. விவசாயிகளுக்கு பயிர்கடன், உரம், விவசாய இடுபொருட்கள், வேளாண் கருவிகள் ஆகியன வழங்கப்படுகின்றன. மகளிருக்கு சிறுவணிகக் கடன், தொழில் முனைவோர் கடன், சுய உதவிக்குழு கடன், பணிபுரியும் மகளிருக்கான கடன், சுய தொழில் கடன் ஆகியன வழங்கப்பட்டு வருகின்றன. விவசாயம், கால்நடை சங்கம், பால் உற்பத்தியாளர் சங்கம், மீன் மற்றும் கால்நடை பராமரிப்பு சங்கம் ஆகிய சங்கங்களின் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா பதவி பொறுப்பேற்றவுடன் முதல் கையொப்பமாக விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்கள். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மழைக்காலங்களில் நீரை சேமித்திட அந்தந்த மாவட்டங்களில் குடிமராமத்து பணிகள் மூலம் விவசாயிகளின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக ஏரிக்குளங்களை தூர்வாரிட உத்திரவிட்டார்கள். இதனால் மழை நீர் சேகரிக்கப்பட்டு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.பொதுமக்கள் மற்றும் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் அரசு வழங்கும் இத்தகைய மக்கள் நலத்திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
64-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிவையொட்டி, பள்ளி கல்லூரிகளில் நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், மாவட்ட அளவில் சிறப்பாக செயல்பட்ட சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், பல்வேறு கடன் திட்டத்தின் கீழ் 788 பயனாளிகளுக்கு ரூ.10.20 கோடி மதிப்பீட்டில் கடன் பெறுவதற்கான காசோலைகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினார்கள்.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. மேலும் ஆவின், மத்திய கூட்டுறவு வங்கி, இப்கோ, கிரிப்கோ, வேளாண் உற்பத்தி, சிந்தாமணி, கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் , மாண்புமிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் , மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் திறந்து வைத்து பார்வையிட்டார்கள். மேலும் விழாவில் பங்கேற்வர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு பொது மேலாளர் /மாவட்ட வருவாய் அலுவலர் (ஆவின்) திருமதி.வே.லதா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைவர் பி.சி.இராமசாமி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் வி.தெய்வநாயகம், தமிழ்நாடு கூட்டுறவு துணிநூல் பதனிடும் ஆலை தலைவர் எம்.ஜி.பழனிசாமி, மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் ஏ.ஆர்.ஜெகதீசன், மாவட்ட கூட்டுறவு அச்சுக்கூட தலைவர் எஸ்.எஸ்.சித்தையன், நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளம் தலைவர் எஸ்.ஆர்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மு.முருகன், கூட்டுறவு சங்கங்கள், துறைசார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.