முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியாறு, பாலாறு பொருந்தலாறு வரதமாநதியில் இருந்து தண்ணீர் திறப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

வியாழக்கிழமை, 16 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

தேனி : தேனி மாவட்டம் பெரியாறு அணை, பழனிவட்டம் பாலாறு பொருந்தலாறு மற்றும் வரதமாநதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெரியாறு அணையிலிருந்து...

தேனி மாவட்டத்திலுள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின்கீழ் உள்ள ஒரு போக பாசனக் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து, கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின்கீழ் உள்ள ஒரு போக பாசனக் பகுதிகளுக்கு பாசனத்திற்காக வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டம், தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து...

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திண்டுக்கல் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக வரும் 18-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 6,168 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

வரதமாநதி அணையிலிருந்து...

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், வரதமாநதி அணையிலிருந்து ஆயக்குடி பாப்பன் வாய்க்கால், பெரிய வாய்க்கால் மற்றும் பழனி வாய்க்கால் ஆகியவற்றின் ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு திண்டுக்கல் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. அவர்களின் வேண்டுகோளினை ஏற்று, வரதமாநதி அணையிலிருந்து ஆயக்குடி பாப்பான் வாய்க்கால், பெரிய வாய்க்கால் மற்றும் பழனி வாய்க்கால் ஆகியவற்றின் ஆயக்கட்டு பகுதிகளுக்கு பாசனத்திற்காக வரும் 18-ம் தேதி முதல் தண்ணீர் திறந்து விட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 1,545 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து