முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி மெட்ரோ ஸ்டேஷனில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மெட்ரோ ரயில் நிலையத்தில் 25 வயது இளம் பெண் பத்திரிகையாளர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காமிராக்கள் மூலம், இந்த சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு இச்சம்பவம் மேலும் வலு சேர்க்கிறது.

மத்திய டெல்லியிலுள்ள ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தில்தான் இந்த மோசமான சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. மெட்ரோ ரயிலின் சுரங்க பாதை பகுதியில் பெண் பத்திரிகையாளர் படிக்கட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பக்கமாக இருந்து வந்த அந்த நபர், பெண்ணின் அந்தரங்க உறுப்பை குறிவைத்து பிடிக்கிறார். முதலில் சற்று தடுமாறிய அந்த பெண், பிறகு அவனது கையை தட்டிவிடுகிறார். இதையடுத்து பயந்துபோன அந்த நபர் அங்கிருந்து தப்பியோடுகிறார். ஆனால், தீரமிகுந்த அந்த பெண் விடவில்லை. அவனை துரத்தியபடியே ஓடுகிறார். இந்த காட்சிகள் அங்குள்ள ஒரு சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தன.

நடந்த சம்பவத்தை சும்மாவிடவில்லை அந்த பெண் பத்திரிகையாளர். காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையயில் இறங்கினர். இதற்காக சுமார் 5000 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து