முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், புதுவையில் சில இடங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 17 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை :  வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்ததால் தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்துக்கான மழை வாய்ப்புகள் குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கூறியதாவது:-

வலுவிழக்கும்

வடக்கு நோக்கி நகர்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது விசாகப்பட்டினத்துக்கு கிழக்கே சுமார் 110 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிக்கு இடையே கரையைக் கடக்க உள்ளது. அதனைத் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுவிழக்கும். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழக கடலோரப் பகுதியில் இருந்த ஈரப்பதம் முழுவதும் ஆந்திரா நோக்கி ஈர்க்கப்பட்டுவிட்டது. அதனால் தற்போது தமிழக கடலோரப் பகுதியில் ஈரப்பதமே இல்லை. இனிமேல் புதிதாக உருவான பிறகே தமிழகத்துக்கு நல்ல மழை கிடைக்கும்.

மழைக்கு வாய்ப்பு

அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.

இதற்கிடையில், வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் 4 செமீ, திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஆகிய பகுதிகளில் தலா 3 செமீ, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டம் மயிலம், கடலூர் ஆகிய இடங்களில் தலா 2 செமீ, தருமபுரி மாவட்டம் அரூர், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், கிருஷ்ணகிரி மாவட்டம் பெனுகொண்டபுரம், திருவள்ளூர் ஆகிய இடங்களில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து