முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழக விவசாயிகள் மீண்டும் டெல்லி பயணம் நாடாளுமன்றத்தை முற்றுகையிட திட்டம்

சனிக்கிழமை, 18 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்துவதற்காக அய்யாகண்ணு தலைமையில் மீண்டும், தமிழக விவசாயிகள் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

திருச்சியில் இருந்து நேற்று காலை, அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 300 விவசாயிகள் டெல்லி புறப்பட்டனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்தை விவசாயிகள் முற்றுகையிட உள்ளதாக அறிவித்து கிளம்பியுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, விவசாய கடன்களை மொத்தமாக தள்ளுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் போராட்டம் நடத்திய அய்யாகண்ணு தலைமையிலான விவசாயிகள் பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கிடைக்காததால் தமிழகம் திரும்பினர்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் டெல்லி புறப்பட்டுள்ளனர் விவசாயிகள். அவர்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லி புறப்பட்டுள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து