முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுடன் பேசுவதற்கு வாய்ப்பில்லை: வடகொரியா தூதர் திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

பியாங்கியாங்: அணு ஆயுத விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐ.நா.வுக்கான வடகொரிய தூதர் ஹன் டே சாங் கூறியதாவது:
எங்கள் நாட்டை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து கொரிய தீபகற்பத்தில் போர் ஒத்திகைகளை நடத்தி வருகின்றன. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவுடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்த முடியும். அதற்கு வாய்ப்பில்லை. எங்கள் நாட்டின் பாதுகாப்பை அதிகரிக்க அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும். போர் ஒத்திகைகளை அமெரிக்கா நிறுத்தினால் எங்களது முடிவை மறுபரிசீலனை செய்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வடகொரிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் சிறப்பு தூதர் ஜோசப் யுன் கூறியபோது, வடகொரிய பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண முயற்சித்து வருகிறோம். ஆனால் வடகொரியாவிடம் இருந்து எவ்வித தகவலும் இல்லை என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து