எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 9-வருவாய் வட்டங்கள் செயல்பட்டு வருகிறது. 10-வது வருவாய் வட்டமாக நம்பியூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் தோற்றுவிக்கப்பட்டு அதன் துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.பிரபாகர் தலைமையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குத்து விளக்கேற்றி புதிய வருவாய் வட்டத்தை துவக்கி வைத்தார்.
புரட்சித்தலைவி அம்மா பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினார்கள். அம்மா அவர்களின் நல்லாசியுடன் நடைபெறும் இந்த அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. பள்ளிக்கல்வித்துறையை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நமது தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் இனி வரும் காலங்களில் மத்திய அரசு கொண்டு வரும் எந்த ஒரு பொதுத்தேர்வுகளையும் சந்தித்து அதில் சாதிக்கும் வகையில் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. மாணவ, மாணவியர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு சென்று பயிற்சி பெற கூடுதல் கட்டணம் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சியானது விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்படவுள்ளது. ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்பட்டதன் மூலம் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் கூடுதலாக அரசு பள்ளிகள் மற்றும் பள்ளி கூடுதல் கட்டிடங்கள் கட்டும் பணி தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்கள் அனைத்து தகவல்களையும் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள வசதியாக ர்நடி டுiநெ என்ற திட்டமானது விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாணவ, மாணவியர்கள் தங்களது மாற்றுச் சான்றிதழ்களை இந்தியாவின் எந்தப்பகுதியில் இருந்தும் இணைதளம் மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு திட்டப்பணிகளை மிக துரிதமாக மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில் ஈரோடு மேம்பால பணியானது இன்னும் 6 மாதத்திற்குள் விரைந்து முடித்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் ஈரோடு மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றிடும் வகையில் 543 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி கோட்டை கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
மாணவ, மாணவியர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடியும் பொழுதே அவர்களுக்கு வேலைவாய்ப்பினை உருவாக்கிடும் வகையில் தொழிற்பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பாடத்திட்டங்களை மாற்றி அமைத்திட 7 நபர் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டங்களை புரிந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்க ஏதுவாக ஆசியர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோபிசெட்டிபாளையம் வட்டம் மற்றும் சத்தியமங்கலம் ஆகிய வட்டங்களை மறு சீரமைத்து புதிய 10-வது வட்டமாக நம்பியூர் வட்டம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி ஆணை வெளிடப்பட்டதைத்தொடர்ந்து இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
நம்பியூர் பகுதி மக்கள் தங்கள் கோரிக்கைக்காக வட்ட தலைமையிடத்தை அடைய வெகுதூரம் செல்ல வேண்டி இருப்பதாலும், அரசின் நலத்திட்டங்கள் விரைந்து கிடைத்திடவும், பொருளாதார முன்னேற்றம் ஏற்படவும், 27 கிராமங்களுடன் நம்பியூரை தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையிலும் நம்பியூர் வருவாய் வட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. நம்பியூர் வட்டம் புதிதாக உருவாக்கப்படும்போது கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் 9 கிராமங்களுடன் வேமாண்டம்பாளையத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய குறுவட்டம் உருவாகும். மேலும் கோபிசெட்டிபாளையம் வட்டம் காசிபாளையம் உள்வட்டத்தில் உள்ள கடத்தூர் கிராமத்தை புதிதாக உருவாக்கப்படும் நம்பியூர் வட்டத்தின் எலத்தூர் உள்வட்டத்தில் சேர்ப்பதால் காசிபாளையம் உள்வட்டத்தின் வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை 6-ல் இருந்து 5 ஆக குறையும். கோபிசெட்டிபாளையம் உள்வட்டத்தில் மொத்தம் உள்ள 15 கிராமங்களில் அளுக்குளி-அ,அளுக்குளி-ஆ, சோழமாதேவிக்கரை, கோட்டுப்புள்ளாம்பாளையம் ஆகிய 4 வருவாய் கிராமங்களை காசிப்பாளையம் உள்வட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நம்பியூர் வட்டத்தில் 27 கிராமங்கள் மட்டுமே இருப்பினும், இவற்றில் அடங்கியுள்ள 6 ஆ வகை கிராமங்களையும் சேர்த்து 33 கிராமங்கள் உள்ளது. உத்தேசிக்கப்பட்ட நம்பியூர் வட்டத்தில் உள்ள 4 கிராமங்கள் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளபோதும் இவை நம்பியூர் வட்ட தலைமையிடத்திற்கு அருகில் உள்ளதால் பொதுமக்கள் எளிதாக அணுக இயலும். எனவே பொதுமக்கள் நலன் கருதி புதிதாக நம்பியூர் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிதாக தோற்றுவிக்கப்படும் நம்பியூர் வட்டத்திற்கு 16 பணியிடங்கள் மறுபரவலமர்த்தல் மூலமும், 27 பணியிடங்கள் புதிதாக உருவாக்கியும் ஆக மொத்த 43 பணியிடங்கள், தொடர் செலவினமாக ரு.58,76,100/- மதிப்பிலும், தொடரா செலவினமாக ரூ.18,36,000/- மதிப்பிலும் புதிதாக ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களின் தேவையறிந்து அவற்றை நிறைவேற்றித்தருகின்ற அரசுக்கு உறுதுணையாக இருப்பதோடு, அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளை பெற்று தங்கள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.சிவக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, கோபி வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.