எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா: கொல்கத்தா டெஸ்டில் முதல் இன்னிங்சில் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியா, 2-வது இன்னிங்சில் தவான், லோகேஷ் ராகுல் ஆட்டத்தால் 49 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. முன்னதாக இலங்கை முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 294 ரன்களை எடுத்தது.
மழையால் பாதிப்பு
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 16-ந்தேதி (வியாழக்கிழமை) போட்டி தொடங்கியது. மழை குறுக்கிட்டதால் அன்றைய தினம் 11.5 ஓவர்களே வீசப்பட்டது. ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவில் காணப்பட்டதாலும், நாள்முழுவதும் மேகமூட்டமாக இருந்ததாலும் வேகப்பந்து வீச்ச்சுக்கு அதிக அளவில் ஆடுகளம் ஒத்துழைத்தது.
3-வது நாள் ஆட்டம்
இதனால் இந்தியா 17 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. 2-வது நாள் ஆட்டத்தின்போதும் மழை குறுக்கீட்டது. இதனால் 21 ஓவர்களே வீசப்பட்டது. இந்தியா 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று முன்தினம் நடைப்பெற்ற 3-வது நாள் ஆட்டம் முழுமையான நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 172 ரன்னில் ஆல்அவுட் ஆனது. புஜாரா 52 ரன்கள் சேர்த்தார். இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் லக்மல் நான்கு விக்கெட்டுக்களும், காமகே, ஷனகா மற்றும் தில்ருவான் பெரேரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
இலங்கை 165 ரன்கள்
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி மேத்யூஸ் (52), திரிமன்னே (51) ஆகியோரின் அரைசதத்தால் 3-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் சேர்த்திருந்தது. சண்டிமல் 13 ரன்னுடனும், டிக்வெல்லா 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்றைய 3-வது நாளில் 72.2 ஓவர்கள் வீசப்பட்டன.
4-வது நாள் ஆட்டம்
நேற்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது சண்டிமலும், டிக்வெல்லாவும் ஆட்டத்தை தொடர்ந்தனர். நேற்றைய தினத்தில் மொகமது ஷமி அபாரமாக பந்து வீசினார். இன்-ஸ்விங், அவுட்-ஸ்விங் என கலக்கினார். டிக்வெல்லாவை 35 ரன்னிலும், சண்டிமலை 28 ரன்னிலும் அவுட்டாக்கினார். அடுத்து வந்த ஷனகா 0 ரன்னிலும், பெரேரா 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.
122 ரன்கள் முன்னிலை
இலங்கை அணி ஒரு கட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்திருந்தது. 9-வது வீரராக களம் இறங்கிய ஹெராத் 67 ரன்கள் சேர்க்க இலங்கை 294 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஹெராத் ஆட்டத்தால் இலங்கை அணி கடைசி 3 விக்கெட்டில் 93 ரன்கள் சேர்த்தது. இலங்கை முதல் இன்னிங்சில் இந்தியாவை விட 122 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இந்திய வீரர்கள் அபாரம்...
122 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய ஆட்டத்தில் நேரம் ஆகஆக ஆடுகளம் பேட்டிங் செய்ய அதிக அளவில் ஒத்துழைத்தது. இதனை இந்தியா சரியாகப் பயன்படுத்தியது. லோகேஷ் ராகுல், தவான் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் அச்சுறுத்திய இலங்கை பந்து வீச்சாளர்களால் 2-வது இன்னிங்சில் நெருக்கடி கொடுக்க முடியவில்லை.
ராகுல், தவான் அரைசதம்...
லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இந்த ஜோடி 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தியது. இருவரும் அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்தனர். லோகேஷ் ராகுல் 65 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். தவான் 74 பந்தில் 7 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்தபின் தவான் அதிரடி ஆட்டத்தை கையாண்டார். இதனால் இந்தியாவின் ஸ்கார் மளமளவென உயர்ந்ததுடன், தவானும் சதத்தை நெருங்கினார். துரதிருஷ்டவசமாக 94 ரன்கள் எடுத்த நிலையில் ஷனகா பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
4-வது நாள் ஆட்டம் முடிவு
தவான் அவுட்டாகும்போது இந்தியா 37.1 ஓவரில் 166 ரன்கள் எடுத்திருந்தது. அரைசதம் அடித்த பின்னர் தவான் 42 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார். இவரது ஸ்கோரில் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்ஸ் அடங்கும். அடுத்து லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக இந்தியா 39.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்திருக்கும்போது 4-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்படுவதாக நடவர்கள் அறிவித்தனர். லோகேஷ் ராகுல் 73 ரன்னுடனும், புஜாரா 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை 49 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
பரபரப்பாகும் கடைசிநாள்...
இன்றைய கடைசி நாள் ஆட்டம் காலை 9.15 மணிக்கு தொடங்கும். இந்தியா உணவு இடைவேளை வரை விளையாடி, அதன்பின் ஒரு மணி நேரம் பேட்டிங் செய்து, இலங்கை அணி வெற்றிக்கு சுமார் 250 ரன்கள் இலக்கு நிர்ணயித்தால் கொல்கத்தா டெஸ்டில் பரபரப்பு ஏற்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.