முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலியை பயனாளிக்கு கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர்.-விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில்   நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கென ஒதுக்கப்பட்ட நேரத்தில் மாற்றுத்திறனாளிகளின் அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அப்போது முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலி வழங்கும் திட்டத்தின் கீழ் விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், ஒண்டிப்புலி நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்த திரு.சுந்தரமூர்த்தி என்ற பயனாளிக்கு சிறப்பு சக்கர நாற்காலியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்  வழங்கினார்கள்;.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  .முத்துக்குமரன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்  பார்த்திபன், தனித்துணை ஆட்சியர்(முத்திரை) திருமதி.உஷா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து