முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளதா என்பதை அறிய பாண்டிபஜார் உணவகத்தில் தமிழிசை நேரில் ஆய்வு

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை,  உணவகங்களில் ஜி.எஸ்.டி விலை 5சதவிதமாக குறைக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை பாண்டிபஜார் உணவகத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் நேரில் ஆய்வு செய்து தெரிந்துகொண்டார்.

கவுகாத்தியில் சமீபத்தில் நடைபெற்ற 23வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வரி மாற்ற முடிவுகளின்படி, ரெஸ்டாரண்டுகளின் மீதான ஜி.எஸ்.டி வரி விதிப்பு 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இதுவரை 100 ரூபாய்க்கு சாப்பிட்டால் பில் 118 ரூபாயாக இருந்த நிலையில், அது நவம்பர் 15ம் தேதி, திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி வரி அறிமுகமான நாளில் இருந்து, ரூ.105 என குறைக்கப்பட வேண்டும்.
குறைக்கப்பட்ட பில் தொகை மாற்றப்பட்ட ஜி.எஸ்.டி வரிப்படி சில ஹோட்டல்கள் 15ம் தேதி முதல் பில் தொகையை குறைக்க ஆரம்பித்துவிட்டன. பலர் தாங்கள் சாப்பிட்ட உணவுக்கான பில்லை, சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

அதேநேரம், சில மோசடி ரெஸ்டாரண்டுகள் இதை செய்வதில்லை. ஜி.எஸ்.டி 18 சதவீதமாக இருந்தபோது இருந்த விலையிலேயே உணவு பொருட்களை விற்பனை செய்கிறார்கள். ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டு பில்லில் காட்டியபோதிலும், உணவு பொருளின் விலையை ஏற்றிவிட்டனர். எனவே 14ம் தேதி என்ன விலைக்கு உணவு விற்றதோ அதே விலைக்கு 15ம் தேதிக்கு பிறகும் உணவு விற்கப்படுகிறது. இதுகுறித்து மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், நேற்று காலை பாண்டிபஜார் பகுதியிலுள்ள ஒரு ரெஸ்டாரண்டில் தமிழிசை ஆய்வு நடத்தினார்.

2 இட்லிகளும், ஒரு வடையும் வாங்கி சாப்பிட்டார் தமிழிசை. இதன்பிறகு பில் தொகையை சரி பார்த்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய தமிழிசை, அனைத்து ஹோட்டல்களும், ஜி.எஸ்.டி வரி குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றார். கமல் டிவிட்டரில் போடும் கருத்துகள் பற்றிய கேள்விக்கு, அதை புரிந்துகொள்ள கோனார் தமிழ் உரை தேவை என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து