முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 நாட்களும் விளையாடிய புஜாரா !

திங்கட்கிழமை, 20 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா : கொல்கத்தாவில் நடந்து வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சத்தீஸ்வர் புஜாரா ஐந்து நாட்களும் பேட்டிங் செய்ததால், 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தியா-இலங்கை அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. நேற்று முன்தினம் 2 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்த புஜாரா நேற்று விளையாடினார். இதன்மூலம் இந்த டெஸ்டில் 5 நாட்களும் விளையாடிய வீரர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும்.

முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்ட போது புஜாரா 8 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 2-வது நாளில் மழையால் பாதிக்கப்பட்ட போதும் 47 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். 3-வது நாளிலும் அவர் பேட்டிங் செய்து 52 ரன்னில் ஆட்டம் இழந்தார். 4-வது நாள் ஆட்டத்தின் போதும் அவர் 2-வது இன்னிங்சை ஆடி 2 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நேற்றைய 5-வது நாளிலும் ஆடி புஜாரா 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். டெஸ்டில் 5 நாட்களும் விளையாடிய 3-வது இந்தியர் என்ற பெருமையை புஜாரா பெற்றார். இதற்கு முன்பு 1960-ம் ஆண்டு ஜெய்சிம்காவும் (ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, கொல்கத்தா), 1984-ம் ஆண்டு ரவி சாஸ்திரியும் (இங்கிலாந்துக்கு எதிராக, கொல்கத்தா) 5 நாட்களும் ஆடி இருந்தனர். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் 3 இந்தியர்களும் 5 நாட்கள் விளையாடியது கொல்கத்தாவில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் 5 நாட்களும் ஆடிய 9-வது வீரர் புஜாரா ஆவார். வெளிநாட்டு வீரர்களில் ஜெப்ரி பாய்காட், ஆலன் லேம்ப், பிளின்டாப் (இங்கிலாந்து), கிம் கியூக்ஸ் (ஆஸ்திரேலியா), அட்ரியன் கிரிபித் (வெஸ்ட்இண்டீஸ்), அல்விரோ பீட்டர்சன் (தென்னாப்பிரிக்கா) ஆகியோர் டெஸ்டில் 5 நாட்களும் ஆடி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து