முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு வடகொரியா: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 21 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: வடகொரியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்றுமுன்தினம் அமெரிக்க அதிபர் அமைச்சரவையில் டிரம்ப் பேசியபோது, "வடகொரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடாக அமெரிக்கா அறிவிக்கிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்னரே நடந்திருக்க வேண்டும். ஆணுஆயுதங்கள் மூலம் வடகொரியா உலகத்தை அச்சுறுத்தி வருகிறது. சர்வதேச பயங்கரவாதத்துக்கு அந்நாடு ஆதரவு அளித்து வருகிறது.

ஒட்டோ வார்மியரின் மரணம் வடகொரியா மீதான எங்களது எண்ணத்தை மாற்றியமைத்தது .ஒரு அற்புதமான இளைஞர் வடகொரியாவின் கொடூரமான தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டார். வடகொரியா மீதான இந்த அறிவிப்பு அந்நாட்டின் மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க வழிவகுக்கும். ” என்று கூறினார்.

ஜார்ஜ் டபிள்யு புஷ் அதிபராக இருந்தபோது, வடகொரியா பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தற்போது டிரம்ப் மீண்டும் வடகொரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு என்று அறிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் முதல், உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து