Idhayam Matrimony

பிரதமர் மோடியின் கழுத்து, கையை வெட்டி வீச பீகார் மக்கள் தயாராக உள்ளனர்: ராப்ரிதேவி

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

பாட்னா: பிரதமர் மோடியின் கழுத்தையும் கையையும் வெட்டி வீசுவதற்கு பீகாரில் நிறைய பேர் தயாராக இருக்கின்றனர் என அம்மாநில முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

 பீகார் பாஜக தலைவர் நித்யானந்த் ராய் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், பிரதமர் மோடிக்கு எதிராக கையை உயர்த்தினால் கையையும் விரல்களையும் வெட்டி எறிந்துவிடுவோம் என ஆவேசமாக கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தாம் பேசியதற்காக நித்யானந்த் ராய் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதனிடையே நித்யானந்த் ராய்-க்கு பதிலளிக்கும் வகையில் பீகார் முன்னாள் முதல்வர் ராப்ரிதேவி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தைரியம் இருந்தால் பீகார் மக்கள் மீது கையையும் விரல்களையும் வெட்டி பாருங்களேன்... அப்போது என்ன பீகாரிகள் அமைதியாக இருப்பார்கள் என நினைத்தீர்களா? எங்களுக்கு என்ன நடக்கிறதோ அதுதான் பிரதமர் மோடிக்கும் நடக்கும். மோடியின் கழுத்தையும் கையையும் வெட்டி வீச பீகாரிகள் நிறைய பேர் இருக்கிறார்கள் என ஆவேசமாக பேசினார் ராப்ரி தேவி

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து