முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனதால் இணைந்தே செயல்படுகிறோம்: பொன்னையன்

புதன்கிழமை, 22 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

தூத்துக்குடி: இரு அணிகளும்  மனம் இணைந்தே செயல்படுகிறது. இரு அணிகளும் மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே இருக்கிறோம் என்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இரு அணிகள் இணைந்து 3 மாதங்கள் ஆகிறது ஆனால் அணிகளின் மனங்கள் இணையவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக மைத்ரேயன் எம்பி முகநூலில் பதிவிட்ட கருத்து அதிமுகவில்  சர்ச்சையை கிளப்பியது. மைத்ரேயனின் கருத்து அவரின் சொந்தக் கருத்து என்று மக்களவை துணை சபாநாயகரும், எம்பியுமான தம்பிதுரை தெரிவித்தார். இதற்கு தான் கூறியது தனிப்பட்ட கருத்து அல்ல, தொண்டர்களின் மன நிலை அது தான் என்று மீண்டும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்  மைத்ரேயன்.

மைத்ரேயனின் அடுத்தடுத்தப் பதிவுகள் இரண்டு அணிகளுக்கு இடையில் நெருக்கடியை  ஏற்படுத்தியுள்ளது.  இதனிடையே மைத்ரேயனின் லேட்டஸ்ட் அப்டேட்டில் தங்களை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் என்று ஒதுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.  ஆனால் மைத்ரேயன் எம்.பி.யின் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமைச்சர்கள் மறுத்து வருகின்றனர். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான பொன்னையன், இரு அணிகளின் மனம் இணைந்தே செயல்படுகிறது. இரு அணிகளும் மனதாலும், உள்ளத்தாலும் இணைந்தே இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து