முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரட்டை இலை சின்ன விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. கேவியட் மனு

வெள்ளிக்கிழமை, 24 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, இரட்டை இலை சின்ன விவகாரத்தில் அ.தி.மு.க சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  தரப்பினர் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இரட்டை இலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தினகரன் கூறியதை அடுத்து, அதிமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

'இரட்டை இலை' சின்னமும் 'அதிமுக' என்ற கட்சியின் பெயரும் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அணிக்கே சொந்தம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் ஆணையத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று தினகரன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க சார்பாக ஓ.பி.எஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்காப்பு மனுவாக அறியப்படும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டதால், இரட்டை இலை சின்னம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும்போது அவர்கள் தரப்பையும் அழைத்து விவரங்கள் கேட்க வேண்டும். அவர்களிடமும் சுப்ரீம் கோர்ட் சார்பில் விசாரணை நடத்தப்படும்.

 அந்த கேவியட் மனுவில் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு விவரமும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சார்பாக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனில் தங்களின் விளக்கத்தையும் கேட்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் ஓ.பி.எஸ். தரப்பினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து