முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெடி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதி விருதுநகர் மாவட்ட கலெக்டர் சிவஞானம் வழங்கினார்

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2017      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  அ.சிவஞானம்,  தலைமையில்  நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு,  முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள்.
முன்னதாக, விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் வெம்பக்கோட்டை வட்டங்களில் கடந்த 20.07.17 அன்று ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த வெம்பக்கோட்டை வட்டத்தை சேர்ந்த திருமதி.பரமேஸ்வரி என்பவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலையையும், சிவகாசி வட்டத்தை சேர்ந்த திருமதி.வசந்தா மற்றும் திருமதி.காந்தி ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 இலட்சத்திற்கான காசோலைகளையும் ஆக மொத்தம் 3 குடும்பத்தினருக்கு ரூ.3 இலட்சத்திற்கான காசோலைகளை முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  சி.முத்துக்குமரன், உதவி ஆணையர் (கலால்)  சங்கரநாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்  பார்த்திபன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து