முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவின் அறிவிப்பு புதிய மோதலை உருவாக்கும்: ஈராக் அரசு எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

பாக்தாத்: ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளது புதிய மோதலை ஏற்படுத்தும் என்று ஈராக் எச்சரித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை உரையாற்றும்போது இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் தற்போது டெல் அவிவ் நகரத்திலுள்ள அமெரிக்க தூதரகம் ஜெருசலேமுக்கு மாற்றப்படும் என்றும், இந்த முடிவால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே அமெரிக்கா மேற்கொண்டு வரும் அமைதி முயற்சிகள் தள்ளிப் போகாது என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா அறிவித்துள்ளது புதிய மோதலை ஏற்படுத்தும் என்று இராக் எச்சரித்துள்ளது.

இந்த நிலையில் டிரம்பின் இந்த முடிவுக்கு அரபு நாடுகள் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இராக் வெளியுறவுத் துறை அமைச்சர் இம்ராகிம் ஜப்ரி கூறும்போது, "அமெரிக்காவின் இந்த முடிவை நாங்கள் கண்டிக்கிறோம். இது புதிய மோதலை உருவாக்கும். ஜெருசலேம் தொடர்பாக நீண்ட காலமாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ள பாலஸ்தீனத்தில் அமெரிக்காவின் இந்த முடிவு மேலும் பதற்ற நிலையை அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து