முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்று சாதனை படைக்கும் ராகுல் டிராவிட் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி: விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்க மண்ணில் தொடரை வென்று சாதனை படைக்கும் ராகுல் டிராவிட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் டெல்லியில்  நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார்.

நல்ல நிலையில்...
அப்போது அவர்  கூறியதாவது:-
விராட் கோலி தலைமையிலான தற்போதைய இந்திய அணி, அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என சரியான அளவில் உள்ளது. நமது அணியின் அனுபவ வீரர்கள் பலரும் நல்ல நிலையில் உள்ளனர். இதனால், தென்னாப்பிரிக்க மண்ணில் சாதிக்க நமது அணி தயாராகவே இருக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய அணியின் விளையாட்டைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இந்திய அணி சாதிக்கும்
தென்னாப்பிரிக்க மண்ணில், அந்த அணிக்கு பெரிய சவாலை இந்திய அணி நிச்சயம் அளிக்கும். அந்தத் தொடரில் வீரர்களுக்குக் காயம் ஏற்படாமல் இருப்பின், நிச்சயம் பெரிய அளவில் இந்திய அணி சாதிக்கும்' இவ்வாறு அவர் கூறினார்.

ஜனவரியில் தொடங்கும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான தொடரை வென்றால், விராட் கோலி தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைக்கும். உள்நாட்டில் தொடர் வெற்றிகளைக் குவித்துள்ள இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து