முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குதிரையையே தூக்கிய அசகாய சூரர்!

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

டெல்அவிவ், உக்ரைனைச் சேர்ந்த ஒரு குதிரை, மனிதர் மீது சவாரி செய்துள்ளது! ஆப்பிரிக்க அமெரிக்கரான டிமிட்ரோ காலட்ஸி என்பரவர் இந்த சாதனையை செய்துள்ளார்.

ஒரு பெரிய குதிரையைத் தூக்கி, தோள்களில் வைத்துக்கொண்டு சில அடிகள் வரை நடந்து தன் வலிமையை நிரூபித்துள்ளார். 39 வயதான டிமிட்ரோ, பெரிய இரும்புக் கம்பியைப் பற்களால் வளைத்திருக்கிறார். ஆணிகளைச் சுத்தியல் இன்றி, தன் கையாலேயே மரத்தில் அடித்திருக்கிறார். மிகப் பெரிய வாகனங்களைத் தன் மீது ஏற்ற வைத்திருக்கிறார். இரண்டு கால் பாதங்களால் ஒரு காரைத் தூக்கியிருக்கிறார். ஒரு வேனை இரு கைகளால் தூக்கியிருக்கிறார். 4 மனிதர்களை ஒரே கையால் தூக்கியிருக்கிறார். இப்படி இதுவரை 63 கின்னஸ் சாதனைகளை செய்து புகழ் பெற்றுள்ளார்.

கொதிக்கும் தேநீர் குவளை தன் 4 வயதில் விழுந்து விட்டதால் தோல் பாதிக்கப்பட்டது என்றும், அதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டு தசைகள் இறுகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  சில ஆண்டுகள் சர்க்கஸில் பணிபுரிந்த அவர் விளையாட்டு வீரர்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதி அதற்காக  2010-ம் ஆண்டு இலக்கியத்துக்கான தங்கப் பேனா விருதினையும் பெற்றுள்ளார். இன்னும் சாதனைகளைத் தொடர்வேன் என்கிறார் டிமிட்ரோ காலட்ஸி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து