முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலத்தில் மாடியில் இருந்து குதித்ததில் ஒரு மாணவி பலி

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சேலம்: சேலத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயன்றதில் பள்ளி மாணவி ஒருவர் பலியானார். மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

சேலம் அரிசிப்பாளையம் தனியார் பெண்கள் பள்ளியை சேர்ந்த மாணவிகள்  கவிஸ்ரீ, ஜெயராணி. எட்டாம் வகுப்பு படித்து வந்த இருவரும் கடந்த 8ம் தேதி பள்ளிக்குச் சென்றவர்கள் மாலை வரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கவிஸ்ரீயின் தந்தை சக்திவேல், ஜெயராணியின் தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் சேலம் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் மகள்களைக் காணவில்லை என்று புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் மாணவிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில், சேலத்தின் மையப்பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றின் மாடியில் இருந்து இரண்டு பெண்கள் நேற்று காலையில், குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவத்தை அறிந்ததும் சேலம் டவுன் காவல்நிலையப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர். அந்த இரண்டு பேரும் மாணவிகள்  கவிஸ்ரீ, ஜெயராணி என தெரியவந்தது.

இதில் மாணவி ஜெயராணி சம்பவ இடத்திலேயே இறந்தார். கவிஸ்ரீ ஆபத்தான நிலையில், சேலம் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டு உள்ளார். முதல்கட்ட விசாரணையில், கவிஸ்ரீ, ஜெயராணி இருவரும் பள்ளியில் அடிக்கடிப் பேசிக்கொண்டே இருப்பார்கள் என்றும் இதனால் ஆசிரியர்கள் அந்த இரண்டுபேரையும் அழைத்துத் திட்டியதாகவும் தெரிய வந்திருக்கிறது.

பள்ளிக்குச் சென்ற மாணவிகள் வீடு திரும்பாததும் மறுநாள் ஓட்டல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதும் சேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டத்தில் சமீபத்தில், மாணவிகள் நான்குபேரை ஆசிரியர்கள் திட்டியதாகவும் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன் என்று மிரட்டியதாகவும் அதனால் நான்கு மாணவியரும் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து