முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆர்.கே. நகர் தொகுதியில் மதுசூதனனுக்கு ஆதரவாக ஜெயலலிதா குரலில் வாய்ஸ் கால் பிரச்சாரம்

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆர்.கே.நகரில் மதுசூதனனுக்கு ஆதரவாக ‘வாய்ஸ் கால்’ பிரச்சாரத்தை அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு தொடங்கியுள்ளது. ஜெயலலிதாவே வாக்கு கேட்பது போல அதில் அவரது குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் மதுசூதனனுக்கு ஆதரவாக  முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அமைச்சர்கள் செங்கோட்டையன், எம்.சி. சம்பத், ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார் ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் வாக்காளர்களின் கவனத்தைக் கவரும் வகையில் ‘வாய்ஸ் கால்’ பிரச்சாரத்தை அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினர் தொடங்கியுள்ளனர். ஆர்.கே.நகர் வாக்காளர்களின் செல்போனுக்கு இந்த வாய்ஸ் கால் வருகிறது. ‘மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள்’ என்ற ஜெயலலிதாவின் குரல் அதில் ஒலிக்கிறது. இந்த வாய்ஸ் கால் சுமார் அரை நிமிடம் நீடிக்கிறது.

ஏற்கெனவே சேகரித்து வைத்திருந்த ஆர்.கே.நகர் வாக்காளர்களின் செல்போன் எண்களுக்கு அந்த ஆடியோவை ‘வாய்ஸ் கால்’ மூலம் அனுப்பி வருகிறோம். ஜெயலலிதாவே நேரடியாக வாக்கு கேட்பது போல இருப்பதால் வாக்காளர்களின் கவனத்தை இந்த ‘வாய்ஸ் கால்’ நிச்சயம் ஈர்க்கும் என நம்புகிறோம்’’ என்று அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன்  தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து