முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 2 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி உத்தரவு

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ஓகி புயலால் ஏற்பட்ட பலத்த காற்றில் சிக்கி உயிரிழந்த நாகை, தூத்துக்குடி மீனவர்கள் இருவர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடிபழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம், செருதூர் கிராமத்தைச் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன். சபினன் என்பவர் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, ஓகி புயலால் ஏற்பட்ட பலத்த காற்றில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும், அவரது சடலம் லட்சத்தீவில் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியையும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வின்சென்ட்டின் மகன் ஜூடு என்பவர் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது, ஓகி புயலால் ஏற்பட்ட பலத்த காற்றில் சிக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

மீன் பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த சபினன் மற்றும் ஜூடு ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவங்களில் உயிரிழந்த இரண்டு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து