முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலி தலைமையிலான அணி வெளிநாடுகளில் சாதிக்கும் - ரவிசாஸ்திரி நம்பிக்கை

சனிக்கிழமை, 9 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை :  அந்நிய மண்ணில் சாதிக்க கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தாகத்துடன் உள்ளதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி இதுவரை 9 டெஸ்ட் தொடர்களை தொடர்ச்சியாக வென்றுள்ளது. ஆனால் அதில் 6 போட்டிகள் இந்திய மண்ணில் விளையாடியவை. ஒரே ஒரு தொடர்தான் ஆசிய நாட்டிற்கு வெளியே வெஸ்ட் இண்டீஸில் வென்றது. இதனால், இந்திய அணி உள்நாட்டில் வெற்றிகளை குவிப்பது போல், வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெறுவதில்லை என்ற விமர்சனம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், ஜனவரி மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஜனவரி 5-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதனையடுத்து ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

இந்திய அணி மீதான விமர்சனம் குறித்து பேசிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, வெளிநாட்டு மண்ணில் அதிக வெற்றிகளை பெற்றதில்லை என்ற வரலாற்றை மாற்ற கோலி தலைமையிலான இந்திய அணி வீரியத்தோடு விளையாட இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் அவர், “தற்போதையை இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. சொந்த மற்றும் அந்நிய மண்ணில் தங்களை நிரூபிக்க கோலி மற்றும் வீரர்கள் தயாராக உள்ளனர். உள்நாடு, வெளிநாடு என்று பிரித்து பார்க்கத் தேவையில்லை. வெற்றி பெறாமல் போவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. கொல்கத்தாவில் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடினால் அடுத்த முறை அதே மைதானத்தில் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் ஆகும். இதே நிலைதான் வெளிநாட்டு மைதானங்களுக்கும் பொறுந்தும்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து