முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகாகோவில் சுடப்பட்ட இந்திய மாணவர் மருத்துவமனையில் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      உலகம்
Image Unavailable

சிகாகோ: அமெரிக்காவில் படித்து வரும் ஐதராபாத்தை சேர்ந்த மாணவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டதில் இந்திய மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐதராபாத் பகுதியை சேர்ந்த முகமது அக்பர்  அமெரிக்காவில் படித்து வருகிறார். அவர் சிகாகோவில் உள்ள 'டேவ்ரி' பல்கலைக்கழகத்தில் கணினி துறையில் முதுநிலை பட்டம் படித்து வருகிறார். இந்த நிலையில் அவர் மர்ம நபர் ஒருவரால் மிகவும் மோசமாக தாக்கப்பட்டு உள்ளார். சாலையில் அவர் சென்று கொண்டு இருக்கும் போது அவரை வழிமறைத்த அந்த மர்ம நபர், முகமது அக்பர் முகத்தில் துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். இதன் காரணமாக அக்பரது தொண்டை மற்றும் கன்னங்களில் காயங்கள் ஏற்பட்டு உள்ளது. தற்போது அக்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரை சந்திப்பதற்காக அக்பரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவிற்கு விரைந்துள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து