முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலியில் விராட் கோலி-அனுஷ்கா திருமணம் டெண்டுல்கர், யுவராஜூக்கு அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி - இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து காதலித்து வருகின்றனர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி கோலி, அனுஷ்கா திருமணம் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள இத்தாலியில் நடக்கிறது. மிலன்நகர் அருகே உள்ள பாரம்பரிய ரிசார்ட்டில் நடக்கிறது. வரும் 12 அல்லது 14ம் தேதி திருமணம் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. பஞ்சாப் பாரம்பரிய முறைப்படி காலையில் திருமணமும், மாலையில் மது விருந்து நிகழ்ச்சியும் நடைபெறும். மேலும் திருமணத்தில் பங்காரா நடனம் இருக்கும். திருமணத்துக்காக கோலி, அனுஷ்கா மற்றும் குடும்ப நண்பர்கள், உறவினர்கள் இத்தாலி சென்று விட்டனர். அனுஷ்கா சர்மாவின் குடும் மத குருவான ஆனந்த் பாபுவும் உடன் சென்றுள்ளார்.

இந்த திருமணத்தில் கிரிக்கெட் வீரர்களில் டெண்டுல்கர், யுவராஜ்சிங் ஆகியோருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்கள் இலங்கை தொடரில் விளையாடுவதால் திருமணத்தில் பங்கேற்கவில்லை. திருமணத்துக்காகவே விராட் கோலி இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரில் இருந்து ஓய்வு கேட்டுக் கொண்டார். அனுஷ்கா தரப்பில் இருந்து ஷாருக்கான், அமீர்கான், தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, டைரக்டர் மனீஷ்சர்மா ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் 28ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமாக நடக்கிறது. இதில் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள், பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், தொழிலதிபர்கள்,அரசியல்வாதிகள் என அனைவரும் கலந்து கொள்கிறார்கள். இதன் பிறகு கோலி, இந்திய அணியோடு இணைந்து தென் ஆப்பிரிக்கா புறப்பட்டு செல்வார். ஜனவரி 5ம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க பயணத்தின் போது கோலி, அனுஷ்காவையும் உடன் அழைத்து செல்வார் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து