முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்டத்துக்கு மத்திய குழு வருகிறது - துணை சபாநாயகர் தம்பிதுரை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 10 டிசம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

புது டெல்லி : கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் பலர் காணாமல் போயிருக்கிறார்கள், சிலர் ஆங்காங்கே கரை ஒதுங்கி இருக்கின்றனர். மீனவர்களை மீட்கும் பணியை தொடர வேண்டும் என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் குமரி மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய மத்தியக் குழு வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விரைவில் அங்கு செல்லவிருப்பதாகவும் தம்பி துரை தெரிவித்தார்.  

கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான ஓகி புயல் குமரி, நெல்லை மாவட்டங்களை சூறையாடி விட்டது. புயல் பாதிப்பு பற்றி அறியாமல் ஆழ்கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் காணாமல் போயினர். இதனால் மீனவ கிராம மக்கள் கண்ணீருடன் கதறி வருகின்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை பாராளுமன்ற துணை சபாநாயகர்  தம்பித்துரை சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீனவர்களை தேடும் பணிக்கு மத்திய அரசு உதவி மிகவும் தேவை என்றும், மத்திய அரசுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொண்டு வருவதாகவும், மேலும் மீனவர்களை மீட்கும் பணி நிறுத்தப்படவில்லை என்றும், மீட்பு பணி தொடர்ந்து நடைபெறும் என்றும் தம்பிதுரை தெரிவித்தார்.

பின்னர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம்   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த கோரிக்கை மனுவினை தம்பிதுரை அளித்தார். கடைசி மீனவர் கண்டுபிடிக்கப்படும் வரை கடற்படையினரின் தேடுதல் தொடரும் என்று மத்திய அரசு உறுதியளித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தம்பிதுரை தெரிவித்தார். வெளிமாநிலங்களில் மீனவர்கள் கரை ஒதுங்கி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறினார். ஒகி புயல் பாதிப்புக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும் என்று கோரி இருப்பதாகவும், தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளதாகவும் தம்பிதுரை கூறியுள்ளார். மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு வர இருப்பதாகவும் அவர்  தெரிவித்தார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் விரைவில் குமரி மாவட்டம் செல்ல இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் கரை ஒதுங்கிய சுமார் 453 மீனவர்கள் மீட்கப்பட்டு அவர்கள் இன்று சொந்த ஊர் திரும்புகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து