முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குஜராத் முதல்வராக எனக்கு ஆசையில்லை: அகமது படேல்

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

ஆமதாபாத் :  குஜராத் முதல்வர் பதவிக்கு நான் ஆசைப்படவில்லை என்று காங்கிரசின் அகமது படேல் தெரிவித்துள்ளார்.

குஜராத் முதல் கட்ட தேர்தல் நடந்த சூரத் நகரில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அகமது படேல் படத்துடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் அகமது படேலை முதல்வராக்க முஸ்லீம்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு அகமது படேல் மறுப்பு தெரிவித்தார். இது பா.ஜ.க.வின் திட்டமிட்ட சதி என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, அகமது படேலை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக பாகிஸ்தான் தூதர் சதி செய்தார் என்று பேசினார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள படேல் கூறியதாவது,

நான் முதல்வர் பதவியை விரும்புவதாக பா.ஜ.க.வினர் தவறான தகவல்களை பரப்புகின்றனர். எனக்கு அத்தகைய ஆசை எதுவும் இல்லை. எதிர்காலத்திலும் அந்த ஆசை வராது. பா.ஜ.க.வினர் பரப்பும் இந்த தகவலில் துளி அளவும் உண்மையில்லை. இவ்வாறு அகமது படேல் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து