முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

ஜம்மு : காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் கண்டவாரா எனும் பகுதி அருகே உள்ள அன்சூ என்ற கிராமத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த கிராமத்தை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களுக்கு உறுதுணையாக துணை ராணுவமும் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டது. நேற்று அதிகாலை அவர்கள் ஒரு வீட்டுக்குள் பதுங்கி இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து  தீவிரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இறுதியில் 3 தீவிரவாதிகளையும் பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். அவர்கள் மூவரும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

முன்னதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையின் போது பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று ராணுவ வீரர்கள் எச்சரித்தனர். ஆனால் அதையும் மீறி ஒருவர் வெளியே வந்தார். இதனால் அவர் மீதும் குண்டுகள் பாய்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து