முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

திங்கட்கிழமை, 11 டிசம்பர் 2017      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : தென் மாநிலங்களில் பருவமழை முடிவுக்கு வரும் நிலையில் வட மாநிலங்களில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.

காஷ்மீர், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கடும் பனிப் பொழிவுடன் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

பஞ்சாப், அரியானா, சண்டிகரில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும். காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்திலும், இமாசல பிரதேசத்தின் பள்ளத்தாக்கு பகுதி, பஞ்சாப் மற்றும் அரியானாவின் மேற்கு பகுதியில் பனிப் புயல் வீசும். பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தானின் பெரும் பகுதியில் குளிர் அதிகரிக்கும்.

இமாசல பிரதேசம் மற்றும் காஷ்மீரில் இன்று பலத்த மழை அல்லது பனிப்பொழிவு நீடிக்கும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து