எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஓகி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளுக்கு சிறப்பு வாழ்வாதார தொகுப்பு உதவிதிட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதன்படி வாழை, ரப்பர், கிராம்பு பயிரிடும் விவசாயிகளுக்கு மானியத்துடன் கூடுதல் நிதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர், அந்த நிதியை உடனடியாக வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
“ஓகி புயல்” கன்னியாகுமரி மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. முதற்கட்ட ஆய்வில், 3,623 ஹெக்டேர் பரப்பிற்கும் அதிகமாக தோட்டக்கலைப் பயிர்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. குறிப்பாக, வாழை சுமார் 1,900 ஹெக்டேர் பரப்பிலும், ரப்பர் மரங்கள் சுமார் 1,400 ஹெக்டேர் பரப்பிலும் சேதம் அடைந்துள்ளது. பயிர் சேத மதிப்பீட்டை கணக்கீடு செய்வதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் 90 குழுக்கள் அமைக்கப்பட்டு, கணக்கீட்டுப் பணி என்னுடைய உத்தரவின் பேரில் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
வாழை பயிருக்கு சேத மதிப்பீடு 33 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால், இடுபொருள் மானியமாக ஹெக்டேருக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து, தற்போது 13,500 ரூபாய் தான் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில், மட்டி, செவ்வாழை, ரசகதலி, நேந்திரன் போன்ற வாழை ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. “ஓகி” புயலினால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை பாதுகாக்கும் வகையிலும், வாழை சாகுபடியை மீண்டும் தொடர்வதற்கும் சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு உதவித் திட்டம் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.
அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில், புயல் பாதிப்புக்குள்ளாகி, மீண்டும் வாழை நடவு செய்ய விரும்பும் விவசாயிகளால் வாங்கப்படும் வாழைக் கன்றுகள், தொழுஉரம், உயிர் உரங்கள் மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்துகள் போன்ற இடுபொருட்களுக்கான செலவுத் தொகைக்காக, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் 13,500 ரூபாய்க்கு கூடுதலாக 40 சதவீத மானியமாக சாதாரண முறையில் சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.35,000/-மும், திசு வளர்ப்பு மூலம் சாகுபடி செய்வதற்கு ஹெக்டேருக்கு ரூ.50,000/-மும் மானியமாக வழங்கப்படும். இதில் முதலாண்டு சாதாரண முறை சாகுபடிக்கு ரூ.39,750/-ம், திசு வளர்ப்பு சாகுபடிக்கு ரூ.51,000/-ம் வழங்கப்படும். ஆக மொத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தில் “ஓகி” புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500/- முதல் ரூ.63,500/- வரை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதே போன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரம் ஒரு முக்கியமான பணப்பயிர் ஆகும். தற்போது 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட ரப்பர் மரங்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.18,000/- வீதம் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து இடுபொருள் மானியமாக வழங்கப்படுகிறது. ரப்பர் மரப் பயிரைப் பொறுத்தவரை, தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும்தான் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் ரப்பர் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக அளவில் சிறு குறு விவசாயிகளாகவே உள்ளனர். பாதிப்பிற்குள்ளான ரப்பர் மர விவசாயிகள் புதிதாக நடவு செய்யவிருக்கும் ரப்பர் மரப் பயிர்களிலிருந்து வருமானம் கிடைப்பதற்கு ஏழு வருடம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்திற்கென ரப்பர் மர மறுசாகுபடிக்கென சிறப்பு வாழ்வாதாரத் தொகுப்பு உதவித் திட்டத்தினை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன். இந்த தொகுப்பு உதவித் திட்டத்தில் பாதிக்கப்பட்ட ரப்பர் மரத் தோட்டங்களில் புதிதாக ரப்பர் மரம் பயிரிட விரும்பும் விவசாயிகள், ரப்பர் மர நடவு செய்து, ஊடுபயிராக வாழை அல்லது அன்னாசி சாகுபடி செய்வதற்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ஆகும் முழு செலவான ரூ.50,000/-தையும் தமிழ்நாடு அரசு மானியமாக வழங்கும். அத்துடன், ரப்பர் மரத் தோட்டங்களில் தேனீ வளர்க்கும் போது, விவசாயிகளுக்கு கூடுதலாக கிடைக்கும் வருமானம் கூட “ஓகி” புயலால் பாதிப்பிற்குள்ளாகி பலன் கிடைக்காமல் போய்விட்டது என்ற கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வருமான இழப்பினை ஈடு செய்யும் வகையில் புதிய தேனீ வளர்ப்பு திட்டமும் செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களை சிறுகுறு விவசாயிகள் வளர்த்து வருவதன் தனித்தன்மையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு சிறப்புத் திட்டமாக ரப்பர் தோட்டங்களில் தேனீ வளர்ப்பிற்கு, 1 ஹெக்டேர் பரப்புக்கு ஆகும் செலவான ரூ.32,000/- மதிப்பிலான 20 தேனீ பெட்டிகளுடன் கூடிய தேனீ குடும்பங்கள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். ஆக மொத்தம், கன்னியாகுமரி மாவட்டத்தில் “ஓகி” புயலால் பாதிக்கப்பட்ட ரப்பர் மர விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.1,00,000/- நிதி உதவியாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இது தவிர, கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் ஒரு முக்கிய பணப்பயிராக “நறுமணப் பயிர்களின் ராணி” எனப்படும் கிராம்பு சுமார் 750 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் கிராம்பு உலகத் தரம் வாய்ந்ததாகும். மேலும் கிராம்பு பயிர்களிலிருந்து பொருளாதார மகசூல் கிடைப்பதற்கு ஏழு வருடம் வரை ஆகிறது. “ஓகி” புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 43 ஹெக்டேர் கிராம்பு பாதிப்படைந்துள்ளது.
எனவே “ஓகி” புயலால் பாதிக்கப்பட்ட கிராம்பு விவசாயிகள் புதிதாக கிராம்பு நடவு செய்ய மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் ஹெக்டேருக்கு ரூ.18,000/- இடுபொருள் மானிய உதவியுடன், கூடுதலாக ஹெக்டேருக்கு ரூ.10,000/- மானியமும் சேர்த்து மொத்தம் ஹெக்டேருக்கு ரூ.28,000/- வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இது தவிர, “ஓகி” புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 280 ஹெக்டேர் பரப்பில் மரவள்ளி, மிளகு, பலா உள்ளிட்ட பிற தோட்டக்கலைப் பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இப்பயிர்களுக்கும் ‘ஓகி’ புயலினால் பாதிப்படைந்த இதர வேளாண் பயிர்களுக்கும் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உரிய நிவாரண நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
“ஓகி” புயலால் பாதிப்புக்குள்ளான கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு அறிவித்துள்ள சிறப்பு வாழ்வாதார தொகுப்பு உதவித் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உதவிகளை உடனடியாக வழங்க அலுவலர்களுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அம்மாவின் வழியில் வந்த தமிழ்நாடு அரசு, வேளாண் பெருமக்கள் மற்றும் மீனவர்களின் நலனில் மிகுந்த அக்கறையுடன் தொடர்ந்து செயல்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் அந்த செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.