முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி மாவட்டத்தில் விற்பனை முனை இயந்திரம் குறித்த ஆய்வுக்கூட்டம் : இணை ஆணையர் சவுரிராஜன் தலைமையில் நடந்தது

செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2017      திருச்சி
Image Unavailable

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பாக விற்பனை முனை இயந்திரம் குறித்த ஆய்வுக்கூட்டம் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணை ஆணையர் சௌரிராஜன் தலைமையில் நடைபெற்றது.

 ஆய்வுக்கூட்டம்

நியாயவிலைக்கடைகளில் விற்பனை முனைய இயந்திரத்தின் பயன்பாடு மற்றும் அதன் தரத்தினை மேம்படுத்துதல் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன. ஒவ்வொரு வட்டத்திலும் நுகர்வோர் கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும், எனவும் புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுவதற்கு புகைப்படம் இல்லாத குடும்ப அட்டைதாரர்கள் விரைவில் புகைப்படம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டது.

பொது விநியோகத்திட்டம் சிறப்பாக செயல்படுத்திட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது. கூட்டத்தில் சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உதவி ஆணையர், விஜயகுமார், திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஆ.ரவிச்சந்திரன், ஓயாசிஸ் கணினி நிறுவனத்தின் மாநில திட்ட மேலாளர் சண்முகபாண்டியன் மற்றும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை, கரூர், அரியலூர், மற்றும் பெரம்பலூர் மாவட்டங்கள் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மற்றும் மாவட்ட மேலாளர்கள், தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள், மாவட்ட கணிணி மேலாளர்கள், ஓயாசிஸ் நிறுவனத்தின் மாவட்ட மேலாளர்கள் மற்றும் வட்ட கணினி ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து