எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையைத் தன் வாலால் சுட்டெரிந்த அனுமன் விரைவில் இலங்கை மாநகரை விட்டு நீங்குவதற்கு எண்ணினான். அருகிலிருந்த குன்று ஒன்றின் மேல் நின்றான். தனது தலைவனான இராமபிரானை மனத்தினால் தொழுதவாறே அங்கி ருந்து புறப்பட்டு வான்வழியே விரைந்து சென்றான்.
“கடல் கடந்து சென்ற அனுமன் இனிதாக மீண்டு வரவேண்டுமே!” என்ற கவலையாலும், “அனுமனுக்கு எதுவும் நேர்ந்துவிடக் கூடாதே” என்ற அச்சத்தாலும் வானர வீரர்கள் அனுமனின் வருகையை ஆவலுடன் நோக்கியிருந்தனர். அனுமன் வருகையைக் கண்டதும் அங்கதன் முதலானோர் தாய்ப் பறவையைக் கண்ட பறவைக் குஞ்சுகளைப் போலப் பெருமகிழ்ச்சி கொண்டார்கள்.
அனுமனின் தாள்களிலும், மார்பிலும், தோளிலும், கைகளிலும் பலவகை ஆயுதங்களால் உண்டாக்கப்பட்ட புண்கள் இருப்பதைக் கண்டு அங்கதன் முதலா னோர் பெரிதும் வருந்தினர். வாலியின் புதல்வனான அங்கதனை அனுமன் முதலில் வணங்கினான். பின்னர், கரடிகட்குத் தலைவனான சாம்பவானைச் சாஷ்டங்கமாக வணங்கினான். முறைப்படி மற்றவர்களுக்கும் வணக்கம் செலுத்தினான்.
“இங்கே இருக்கும் வானர வீரர்கட்கெல்லாம் மங்களமுண்டாக வேண்டும் என்று இராம பிரானின் பத்தினியாகிய சீதாபிராட்டியார் வாழ்த்துக் கூறி அனுப்பினார்” என்பதையும் அனுமன் அவர்களுக்கு எடுத்துச் சொன்னான். மகேந்திர மலையிலிருந்து சென்றது முதல் இலங்கை சென்று மீண்டது வரையில் விளக்கமாக எடுத்துச் சொல்லுமாறு வானர வீரர்கள் அனுமனை வேண்டிக்கொண்டனர்.
சீதாபிராட்டியின் கற்பொழுக்கத்தையும், பிராட்டியார் தந்த சூடாமணி என்னும் அடையாளத்தைத் தான் பெற்று வந்ததையும் அனுமன் விளக்கமாகச் சொன்னான். ‘இனி நாம் செய்ய வேண்டியது என்ன?” என்று வானர வீரர்கள் அனுமனை வினவினர். “இராமபிரான் இருப்பிடம் சார்ந்து, பிராட்டியின் நிலையைக் கூறி இராம பிரானின் துயரத்தைத் தீர்த்தலே நாம் செய்யத்தக்க செயல்!” என்று அனுமன் கூற, அனைவரும் விரைவில் அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டுப் போனார்கள்.
உச்சி வெயி லில் மதுவனத்தை அடைந்தார்கள். வானர சேனைகளின் பசி தீர மது அளிக்கு மாறு வானரத் தலைவர்கள் அங்கதனை வேண்டிக்கொண்டார்கள். அங்கதனும் அனுமதி அளித்தான். மதுவனத்தில் இருந்த தேனைத் தம் மனம் போல உண்ட வானரர்கள் மதுவின் மயக்கத்தினால் களியாட்டம் போட்டார்கள். மதுவனத்தை வானரர்கள் அழிப்பதைக் கண்ட சோலைக் காவலர்கள் தமது தலைவனான ததிமுகனிடம் இச்செய்தியைச் சொன்னார்கள்.
இரண்டு கோடி வானரங்களுடன் அச்சோலைத் தலைவனான ததிமுகன் மதுவனத்துக்கு வந்தான். சினத்துடன் ததிமுகன் வருதலைக் கண்ட வானர வீரர்கள் ஓடிப்போய் அங்கதன் அடிகளில் வீழ்ந்து வணங்கினர். அங்கதன் ததிமுகனை அடித்துத் துரத்தினான். ததிமுக னுடன் வந்த வானரர்கள் குத்துண்டு தப்பித்துச் சென்றார்கள். பின்னர் அங்கதன் முதலானோர் இனிதே மதுவனத்தில் இளைப்பாறி வெயில் குறையும் சமயத்தை எதிர்நோக்கியிருந்தனர்.
சீதையைத் தேடுமாறு வானர வீரர்களை அனுப்பிய சுக்ரீவன் இராமனுக்குத் தேறுதல் கூறிக் கொண்டிருந்தான். சீதையை நினைக்கும் போதெல்லாம் சோகத்தால் இராமன் மூர்ச்சையானான். வடக்கு, கிழக்கு, மேற்கு ஆகிய முத்திசைகளிலும் சென்ற வானரர்கள் பிராட்டியைக் காணாது வறிதே திரும்பினர். ஆனால், தெற்கே சென்ற வானரர்கள் மட்டும் இன்னும் திரும்பவில்லை. எனவே, அனுமன் பிராட்டி யைக் கண்டு திரும்புதல் உறுதியென்பதில் இராமனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்ததால், இராமன் உயிரோடு வாழ்ந்து கொண்டிருப்பவனானான். எனினும், இராமனுக்கு, ஓர் ஐயம் ஏற்பட்டது.
“ஒரு மாதத்துக்குள்ளாகவே சீதை யைத் தேடிக் கண்டுபிடித்துத் திரும்பி வரவேண்டும் என்ற தவணையோ சென்று விட்டது. ஆனால், தென்திசை நோக்கிச் சென்ற வீரரோ திரும்பவில்லை. அவ்வானர வீரர்கள் தவணை நாள் கடந்து விட்டதற்கஞ்சித் தம் முயிரைத் துறந்திருத்தல் கூடுமோ?” என்று இராமன் சுக்ரீவனிடம் கூறிக்கொண்டிருந்தான்.
இராமனும் சுக்ரீவனும் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில் இரத்தம் சொட்டச் சொட்டத் ததிமுகன் அங்கே வந்து சேர்ந்தான். மதுவனம் அழிவுற்ற செய்தியைச் சுக்ரீவனிடம் கூறினான். இது கேட்ட சுக்ரீவன் “இச்செயல் மகிழ்ச்சிக்கு அறிகுறியே!” என்று இராமனிடம் கூறினான். நடந்த முடிந்த செயல்களை விவரமாகத் ததிமுகன் சுக்ரீவனிடம் கூறினான். ததிமுகனுக்குச் சுக்ரீவன் ஆறுதல் மொழிகளைச் கூறியனுப்பி வைத்தான்.
தவணை நாட்கள் கழிந்து போனதை எண்ணிய வானர வீரர்கள் அனுமனை முதன்முதலாக விரைவில் செல்லுமாறு இராமனிடம் அனுப்பி வைத்தனர். அனுமனை இதுவரையிலும் காணாத இராமபிரான், “வானரர்கள் பிராட்டியை உயிருடன் பார்த்தோம் என்று கூறுவார்களோ? அல்லது இல்வுலகில் இல்லை, மேல் உலகத்தில் இருக்கக்கூடும்! என்று கூறுவார்களோ? யாதும் தெரியவில்லையே!” என்று சுக்ரீவனிடம் கூறி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தான்.
இவ்வாறு இராமன் கூறிக் கொண்டிருக்கும் போது, அனுமன் தென்திசை யிலிருந்து வருவதை இராமபிரான் பார்த்துவிட்டான். அனுமனும் இராமபிரான் இருப் பிடம் வந்து சேர்ந்தான். வந்தவர் இராமபிரானை வணங்கவில்லை. தலைமேல் கூப்பிய கைகளையுடையவனாய்த் தென்திசை நோக்கித் தன் ஆறு அங்கங்களும் தரைமேல் படியுமாறு வீழ்ந்து வணங்கி வாழ்த்தினான். இதனைக் குறிப்பால் உணர்ந்து கொண்ட இராமபிரானின் உள்ளம் பெரிதும் உவகையடைந்தது. அவன் தோள்கள் பூரித்தன! கண்களிலிருந்து மகிழ்ச்சிக் கண்ணீர் பெருகியது. பிரிவுத் துன்பம் நீங்கிப்போயிற்று. சீதையிடம் கொண்ட அன்பு அதிகரித்தது.
பிராட்டியைத் தான் அசோகவனத்தில் கண்ட காட்சியை அனுமன் தன் அறிவு நலம் வெளிப்படுமாறு அற்புதமாகக் கூறலானான். ‘சீதையை’ என்று ஆரம்பித்தால் ‘சீதையைக் கண்டானோ? இல்லையோ?’ என்ற ஐயம் இராமனுக்கு ஏற்படும். ஆதலால் ‘சீதையை’ எனத் தொடங்காமல், ‘கண்டேன்’ என்றே தொடங்குகிறான். வால்மீகி இராமாயணத்திலும் “த்ருஷ்டாஸீதா” என்றே குறிக்கப்படுதலைக் காண்கிறோம். ‘கண்டேன்’ என்று மட்டும் கூறிவிட்டால், அனுமனால் காணப்பட்ட சீதை கற்புடன் இருக்கிறாளா? இல்லையா? என்ற ஐயம் தோன்றுதல் இயல்பே யன்றோ? எனவே ‘கற்பினுக் கணியை’ என்ற தொடரை அடுத்துப் பயன்படுத்து கிறான்.
இவ்வாறு, அனுமன் இராமபிரானின் உள்ளம் தெளிவடையும் வகையில் மிக அற்புதமாகச் சொற்களைப் பயன்படுத்தும் சொல்லாற்றலைக் காணும் போது, அனுமன் ‘சொல்லின் செல்வன்’ என்பதை ஐயந்திரிபறத் தெரிந்து கொள்கின்றோமல்லவா? இன்னும் ஒரு மாத காலமே உயிரோடிருப்பேன்! அதற்குள் அவர் வந்து என்னை அழைத்துப் போக மனமில்லையென்றால் நான் உயிர் துறப்பேன்!” என்று தாங்கள் இருக்கும் திசை நோக்கித் தங்களுக்கு வணக்கம் செலுத்தி னார்கள். அதன் பின், அன்னையார் தம்முடைய ஆடையில் முடிந்து வைத்திருந்த சூடாமணியை எடுத்து என்னிடத்தில் இனிதாகத் தந்தார். இதோ பாருங்கள் அந்தச் சூடாமணியை!” என்று கூறி அனுமன் சூடாமணியை இராமபிரானிடம் தந்தான்.
அப்போது, அங்கதன் முதலான படைத்தலைவர்கள் இராமபிரானையும் சுக்ரீவனையும் வணங்கி நின்றனர். தங்களில் செயல் வெற்றிபெற்றமையை எண்ணிப் பூரிப்புடன் நின்றார்கள். சுக்ரீவன் இராமபிரானை நோக்கி, “ஐயனே! பிராட்டியை நாம் எளிதாகக் கண்டு கொண்டோம்” என்று கூறினான். இவ்வாறு சுக்ரீவன் கூறியதும் “சீதை இருக்குமிடம் தெரிந்தும், இன்னும் காலம் தாழ்த்துகின்றாயே!” என்று இராம பிரான் கூறினார்.
அவ்வளவில் படைகள் அனைத்தும் புறப்படுவதற்கான கட்டளை யினைச் சுக்ரீவன் பிறப்பித்தான். உடனே, கடல் போலச் சேனைகள் தென்திசை நோக்கிப் புறப்படலாயின.. அனுமன் சொன்ன கதைகளையெல்லாம் கேட்டுக்கொண்ட வானரசேனைகள் பன்னிரண்டு தினங்களில் தென்திசையிலுள்ள கடலைக்கண்டன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 10 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி5 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா
22 Apr 2024டெல் அவிவ் : இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ ராஜினாமா செய்துள்ளார்.
-
பார்லி. தேர்தல் வாக்குப்பதிவு சதவீதத்தில் குளறுபடி ஏன்? - சத்யபிரத சாகு விளக்கம்
22 Apr 2024சென்னை : செயலியில் கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதத்தை அளித்த காரணத்தால் தான் வாக்குப்பதிவு சதவீதத்தில் மாறுபாடு ஏற்பட்டது என்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு த
-
கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கேட்டவருக்கு ரூ.75,000 அபராதம் : டெல்லி ஐகோர்ட்டில் பொதுநல மனு தள்ளுபடி
22 Apr 2024புதுடெல்லி : கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்தவருக்கு ரூ.
-
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண வரவேற்பு
22 Apr 2024இந்திய திரையுலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
-
பிரதமரின் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்: தமிழக அமைச்சர் பதிவு
22 Apr 2024சென்னை : பிரதமர் மோடியின் சர்ச்சை பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பதிவிட்டுள்ளார்.
-
கம்யூ. சிந்தனையை செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி : உ.பி.யில் பிரதமர் மோடி பேச்சு
22 Apr 2024அலிகார் : மாவோயிஸ்ட், கம்யூனிஸ்டுகளின் சிந்தனையை இந்தியாவில் செயல்படுத்த இன்டியா கூட்டணியினர் முயற்சி செய்வதாக உத்தரப்பிரதேசத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றஞ
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு தள்ளுபடி
22 Apr 2024சென்னை : விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
-
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்ப பிரதமர் புதிய யுக்திகளை வைத்துள்ளார்: ராகுல் காந்தி
22 Apr 2024புதுடெல்லி : மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து அவர்களின் கவனத்தை திசை திருப்ப பிரதமர் மோடி பல புதிய யுக்திகளை கொண்டிருப்பதாகவும், ஆனால் அவரின் பொய்களுக்கு முடிவு
-
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது : தமிழக பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை
22 Apr 2024சென்னை, தமிழகம் முழுவதும் பள்ளிகளில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
சென்னை-சேலம் விமான சேவை நேரம் மாற்றம்
22 Apr 2024சென்னை : சென்னை விமானநிலையத்துக்கு மதிய நேரத்தில் சேலத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த தனியார் ஏர்லைன்ஸ் விமான சேவையின் நேரம் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டு உள்ளது.
-
தமிழக மகளிர் காங்கிரசுக்கு புதிய தலைவர் நியமனம்
22 Apr 2024சென்னை : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
22 Apr 2024ஜம்மு : ஜம்மு காஷ்மீரில் நேற்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) சோதனையில் ஈடுபட்டனர்.
-
மக்களவை தேர்தல்: சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
22 Apr 2024சூரத் : சூரத் தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார்.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
மே 1-ம் தேதி வரை ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு
22 Apr 2024புதுடெல்லி : சா்வதேச போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபா் சாதிக்கின் நீதிமன்றக் காவல் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
நாடு முழுவதும் வெப்ப அலை: தேர்தல் ஆணையம் ஆலோசனை
22 Apr 2024புதுடெல்லி : நாடு முழுவதும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருப்பதால் வாக்குப்பதிவு, பிரச்சாரம் நடைமுறைகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து டெல்லியில
-
தமிழகம், கர்நாடக உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வெப்ப அலை வீசும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
22 Apr 2024புதுடில்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் இன்று (ஏப்ரல் 22) வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆசிரியர் பணி நியமன ஊழல் வழக்கு: 24,000 பணியிட உத்தரவுகளை ரத்து செய்து கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்க ஆசிரியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா ஐகோர்ட், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ம் ஆண்டு
-
பாராளுமன்ற தேர்தல்:தமிழகத்தில் வாக்குப்பதிவு சதவீத குளறுபடிக்கு செயலியே காரணம்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
22 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் நடைபெற்ற வாக்குப்பதிவில் ஏற்பட்ட குளறுபடிக்கு செயலியே காரணம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
65 வயதுக்கு மேற்பட்டோரும் மருத்துவ காப்பீடு பெறலாம் : இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு
22 Apr 2024புதுடெல்லி, இனி 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மருத்துவ காப்பீடு பெறலாம் என இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) தெரிவித்துள்ளது.
-
அசல் ஆவண நகல் ஒப்படைப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 25-ம் தேதி வரை நீட்டிப்பு
22 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் வரும் 25-ம் தேதி வரை 34-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
பாரதிராஜா, நட்டி, ரியோராஜ், சாண்டி இணைந்து நடிக்கும், "நிறம் மாறும் உலகில்"
22 Apr 2024நான்கு விதமான வாழ்க்கை, நான்கு கதைகள் அதை இணைக்கும் ஒரு புள்ளி, என நம் வாழ்வின் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளை பேசும் அழகான படமாக இப்படம் உருவாகியுள்ளார் அறிமுக இயக்குந
-
மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு கட்சி அமோக வெற்றி
22 Apr 2024மாலே : மாலத்தீவு பாராளுமன்ற தேர்தலில் அதிபர் முய்சு தலைமையிலான பி.என்.சி. கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.