முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்த இருசக்கர வாகன பேரணி: மாவட்ட நீதிபதி தொடங்கிவைத்தார்

செவ்வாய்க்கிழமை, 19 டிசம்பர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நேற்று நடைபெற்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்த இருசக்கர வாகன பேரணியை மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை வேங்கிக்காலில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்திலிருந்து தி.மலை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு குறித்த இருசக்கர வாகன பேரணி புறப்பட்டது.

வாகன பேரணி

இந்த விழிப்புணர்வு பேரணிக்கு தலைமை வகித்த மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி தொடங்கிவைத்து பேரணியில் கலந்து கொண்டார். பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் , வேங்கிக்கால் அண்ணா நுழைவு வாயில் அறிவொறி பூங்கா மத்திய பேருந்து நிலையம் பெரியார்சிலை அண்ணாசிலை காந்தி சிலை வழியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 16 கால் மண்டபம் முன்பு சென்றடைந்தது. இந்த பேரணியில் பங்கேற்ற நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள் வழக்கறிஞர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த போது மக்கும் உடலை மனிதனுக்கு கொடுப்போம், அழியும் உறுப்பால் அடுத்தவரை வாழவைப்போம். உறுப்புகள் கொடுத்து உயிருக்கு உயிர்கொடுப்போம் மனிதனாக மண்ணுக்குள் போவதைவிட உடலுறுப்பை கொடுத்து மனிதனை வாழ வைப்போம் என்ற பதாகைகள் ஏந்தி பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஆர்.நாராஜா, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான கே.ராஜ்மோகன், குற்றவியல் நீதித்துறை நடுவர் விஸ்வநாதன் மற்றும் நீதிபதிகள், அரசு அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். முடிவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் எஸ்.சையத்ரஷீத் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து